India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஷேர் பண்ணுங்க

கோவை மாநகரில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 277 போ் உயிரிழந்துள்ளனா். இதேபோல் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக 6,70,512 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டிய 18,331 போ் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.12.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவை, நல்லம்பாளையத்தில் உயர் ரக போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீஸாா் நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் இடையா்பாளையத்தைச் சோ்ந்த அஜய், மணிகண்டன், விசாகன், அப்பாஸ், தனுஷ் ஆகிய 5 பேரை கைது செய்து 130 கிராம் மெத்தபெட்டமைன், காா், கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவை போத்தனூரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை மறித்த இளைஞர் ஒருவர் தன்னிடம் இளம்பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். பணம் எடுத்து வருவதாக கூறிய இளைஞர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் புரோக்கர் உதயகுமாரை கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் இன்று (17.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.