India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையில் இன்று(ஜன.28) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, மைலம்பட்டி, சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கேஎன்ஜி புதூர், தாடாகம் சாலை, சோமையம்பாளையம், வேடவேடம்பட்டி, வதம்பச்சேரி பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 33 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்பு துறையினர் விடுதியில் இருந்த உணவு (ம) குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த செவிலியர் கல்லூரிக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று மாலை குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த போது கல்லாறு – ஹில்குரோ நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது தெரிந்து மீண்டும் குன்னூர் சென்றது. தண்டவாள சீரமைப்பு பணிக்காக நாளை(ஜன.28) காலை மேட்டுப்பாளையம்-ஊட்டி சேவையை ரத்து செய்து ரயில்வே அறிவித்துள்ளது.

(27.01.2026) கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

கோவை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

நீலகிரி மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக இயற்கை சாயங்களை கொண்டு ஓவியமாக தீட்டியவர் கோத்தகிரியை சேர்ந்த கிருஷ்ணன் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. கிருஷ்ணன் இறந்த பிறகு மனைவி சுசிலா தனது 4 குழந்தைகளுடன் கல்லாறு அருகே பாக்குத்தோப்பில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த இயலாமல் குடிசை வீட்டில் தவித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.