India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை: எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன் (75) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவர், 30 ஆண்டுகளாக கல்விப்பணியோடு, சமுதாயப்பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டவர். விளையாட்டுத்துறையிலும் மாணவர்களை ஊக்குவித்து வந்தார். இவரது மறைவுக்கு துறை சார்ந்த அதிகாரிகள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இது கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவையில் மட்டும் 69 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே <
கோவை,சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களை மேம்படுத்தும் ‘நல்லோசை’ என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் விடுதிகளில் உள்ள மாணவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லலாம்.
மேட்டுப்பாளையம் வெள்ளிபாளையம் சாலையை சேர்ந்தவர் கருப்பாயி(98). இவர் தகர செட்டிலான வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு இவரது பக்கத்து வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு போடப்பட்ட பந்தலில் சீரியல் லைட் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் கருப்பாயி வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் கருப்பாயி உடல் கருகி பலியானார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான அனுமதி 6 மாதங்களுக்கு ம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (02.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நில அளவை செய்ய விரும்பும் நில உரிமையாளர்கள் இனி தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் தங்களது பகுதியில் உள்ள e-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர் தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டும், செருப்பு போட மாட்டேன் என்றும் புது கதையை சொல்லும் தம்பிக்கு நான் இப்போது சொல்கிறேன். இது பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். எனவே வாழ்நாள் முழுக்க செருப்பே போட முடியாது என்றார்.
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெரிய கடை வீதி இன்ஸ்பெக்டர் ராஜகுமார் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், காட்டூர் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும் என பல்வேறு ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று கூறுகையில், பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அதன் கிளை நிறுவனங்கள் அனைத்திலும் தனித்தனியான உள்புகார் குழுக்கள் அமைக்க வேண்டும். அப்படி அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.