Coimbatore

News April 9, 2025

ட்ரோன் பறக்க தடை

image

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகையை முன்னிட்டு சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் 10 கிமீ சுற்றளவில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு சூலூரில் இருந்து வெலிங்டன் வரை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2025

மருதமலைக்கு காரில் செல்லகூடாது

image

மருதமலைகோவிலுக்கு நாளை(ஏப்.10) முதல் 14ஆம் தேதி வரை பக்தர்கள் வாகனங்களில் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை முதல் பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவர். இதனால், மலைக்கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் வர அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள் வாயிலாகவும், மலைப்படி வழியாகவும் வரலாம். (SHARE பண்ணுங்க)

News April 9, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (08.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அதிகப்படுத்த சிறப்பு முகாம்

image

கோவை மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய சந்தேகங்களை தெரிந்துகொள்ள மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் 89259-75980. 89259-75981, 89259-75982. 90430-66114, 89258-40945 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

மகாவீரா் ஜெயந்தி: மதுக்கடை மூட உத்தரவு

image

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில்> மகாவீரா் ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்ற மதுகூடங்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.

News April 8, 2025

கோவை: வீட்டில் இருவர் சடலமாக மீட்பு!

image

கேரளாவை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர், கோவை, துடியலூரில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இன்று நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேக்கிரி ஊழியர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News April 8, 2025

மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருந்த மக்கள் குறைதீர்ப்பு முகாம், சில நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

News April 8, 2025

BREAKING: இரு தரப்பினர் மோதல்! வாலிபர் குத்திக்கொலை

image

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து நடந்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 8, 2025

ஒரு மாத இலவச பயிற்சி

image

கோவையில் கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி வரும் 9ஆம் தேதி முதல் 30 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், தையல், ஆரி ஒர்க், போட்டோ, வீடியோ கிராபிக், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் தேநீர், மதிய உணவு, சீருடை வழங்கப்படும். தொடர்புக்கு 94890-43926 அழைக்கவும். (நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.)

News April 8, 2025

மத போதகர் மீது போக்சாவில் வழக்கு பதிவு 

image

கோவையில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ் (32). இவர் தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பெற்றோரிடம் புகார் அளித்த நிலையில், கோவை மத்திய போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். 

error: Content is protected !!