Coimbatore

News April 26, 2024

வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்

image

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சோ்ந்தவா் உமா மகேஸ்வரி (45). இவரது வீட்டிலிருந்து நேற்று புகை வெளிவந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தேனிக்கு சென்ற உமா மகேஸ்வரிக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 26, 2024

கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் விரைவில் தீர்ப்பு

image

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 2019ல் கோவை மகளிர் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை முடிவுற்று வரும் ஜூனில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 26, 2024

மேட்டுப்பாளையம்: போக்சோ சட்டத்தில் இருவர் கைது

image

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவன் மற்றும் கூலி தொழிலாளி லோகேஷ் உள்ளிட்ட இருவரும் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனால் சிறுமி ஐந்து மாத கர்ப்பமானார். சிகிச்சைக்காக நேற்று மேட்டுப்பாளையம் ஜிஎச் சென்றபோது இதுகுறித்து தெரியவந்தது. மேட்டுப்பாளையம் மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

News April 26, 2024

தோட்டக்கலை துறை அறிவிப்பு

image

தோட்டக்கலை துறை துணை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் சுமாா் 91.80 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வோ் வாடல் நோய் பாதிப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நோயால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட மரங்களுக்கு மறுநடவு செய்ய ஏதுவாக தென்னை நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக அதிகபட்சமாக 40 நாற்றுகள் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2024

15 வயது சிறுமி கர்ப்பம் – சிறுவன் உட்பட இருவர் போக்சோவில் கைது.

image

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவன், கூலி தொழிலாளி லோகேஷ் உள்ளிட்ட இருவரும் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனால் சிறுமி ஐந்து மாத கர்ப்பமானார். சிகிச்சைக்காக இன்று மேட்டுப்பாளையம் ஜிஎச் சென்ற போது இதுகுறித்து தெரிய வந்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

News April 25, 2024

உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.1.44 கோடி

image

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டதாக மொத்தம் 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 317 வழக்குகள் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 62 வழக்குகளில் ரூ.1,44,82,819 பணம் உரிமை கோரப்படாமல் கருவூலத்தில் உள்ளது.

News April 25, 2024

கோவையில் இருந்து புறப்பட்ட பாதுகாப்பு படையினர்

image

மக்களவைத் தேர்தல் கடந்த, 19ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதற்காக, 5 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர். தினந்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து சோதனையிலும் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்ததையொட்டி தற்போது, 3 கம்பெனிகள் கோவையில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர்.

News April 25, 2024

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அறிவிப்பிற்கு காத்திருப்பு

image

நடப்பாண்டு முதல் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளில் முழுமையாக சேர்க்கை செயல்பாடுகள் ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது. எனினும் இதுவரை மாணவர் சேர்க்கை தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வியிடம் கேட்டபோது இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

News April 25, 2024

கோவையில் இருந்து 400 பேர் ஹஜ் யாத்திரை.

image

மத்திய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய பயணமான ஹஜ் யாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை 17 கட்டங்களாக ஹஜ் பயணிகள் விமானங்களில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அவர்களுடன் அனுபவமிக்க தன்னார்வலர்களும் செல்கின்றனர். கோவையில் இருந்து 400 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் ஆட்சியர்

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்க செல்லும் பொழுது நீர்சூழல் (அ) சேறுகளின் புதைக்குழிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் குளிக்கவோ செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.

error: Content is protected !!