India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குச் சூரிய மின் பலகை (Solar Panel) பொருத்தும் இலவச தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். 10, 12-ம் வகுப்பு, ITI அல்லது பட்டப்படிப்பு முடித்த 18-32 வயதுடையோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

கோவை மாவட்டத்தில் இன்று (19.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <

கோவை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

கோவை – பீளமேடு ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் மோதி உயிரிழந்தார். கருப்பு நிற பனியன் மற்றும் காவி நிற வேட்டி அணிந்திருந்த அவரிடம் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நான் இந்த காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் பெங்களூர் சென்றேன். தற்போது இதே காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சந்திரயான் மாதிரியை திறந்து வைத்துள்ளேன். பெருமையாக உள்ளது. கோவையில் இருந்தும் சந்திரயானுக்கு உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது எனக்கு தெரியும். அறிவியலில் கோவை மாவட்டம் நல்லிடத்தில் உள்ளது” என்றார்.

கோவை மக்களே SBI வங்கியில் 2,050 வட்டார அளவிலான அதிகாரிகள் (CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு ஷேர் பண்ணுங்க

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

கோவை தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்த சென்னிமலையைச் சேர்ந்த கோவர்தன மணி பாரதி (18) நேற்று பைக் விபத்தில் உயிரிழந்தார். பீளமேடு அருகே அவர் சென்றபோது, ஆம்னி பேருந்து உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் சக்கரம் அவர் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.