India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாநகராட்சியில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ரூ.1200 கோடி மதிப்பில் புதிய 24×7 குடிநீர் திட்டமும், ரூ.1604.11 கோடி மதிப்பில் விரிவான பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டுள்ளது. பழைய பாதாள சாக்கடை கட்டமைப்புகளைச் சீரமைக்க ரூ.850 கோடியும், விடுபட்ட பகுதிகளுக்குப் புதிய இணைப்புகள் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கோவை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

கோவை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வரும் பிப்.22-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. கோவை, கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக கோவை மாவட்ட திமுக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். <

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

கோவை–ஜெய்ப்பூர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச்.29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவையிலிருந்து வியாழக்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில் (06181), திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சனிக்கிழமை ஜெய்ப்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு புதன்கிழமை கோவையை வந்தடையும். கோடைக்கால பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10th, 12th, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 04222-642388 என்ற எண்ணை அழைக்கலாம். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

கோவை மாவட்டத்தில் இன்று (17.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (17.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.