India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டத்தில் இன்று (17.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், இன்று காலை சுமார் 25-வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 2 ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதலில் காயம் அடைந்து இந்த யானை உயிரிழந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து வனச்சரக அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராக பணியாற்றிய மார்ட்டினின் மனைவியும், தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் மாமியாருமான லீமா ரோஸ் மார்ட்டின் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸை சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சென்று அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின் போது EX அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.(SHARE)

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும். மேலும், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

கோவை கொடிசியாவில் அமைந்துள்ள மண்டல அறிவியல் பயிற்சி மையத்தில், அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு, ஐஓடி எனப்படும் மூன்று மாத தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகள் இந்த மாத இறுதி சனிக்கிழமை துவங்க உள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 85239 – 09178 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் மாவட்ட அறிவியல் அலுவலர் நேற்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<
Sorry, no posts matched your criteria.