Coimbatore

News February 16, 2026

மதுக்கரை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு

image

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பிரிவு மொடமாத்தி சுற்று பகுதியில் இன்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா விவசாய நிலத்தில் முள் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 16, 2026

கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கோவை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 16, 2026

கோவை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News February 16, 2026

கோவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

கோவை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும்.
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 16, 2026

BREAKING: சிங்காநல்லூர் நகை கடையில் கொள்ளை

image

சிங்காநல்லூர் வசந்தாமல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் குடும்பத்துடன் சிவராத்திரி வழிபாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அவரது அடகு கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் 70 பவுன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 16, 2026

வெள்ளியங்கிரி மலை பற்றி தெரியுமா?

image

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோயிலில் சிவபெருமான் பஞ்ச லிங்க வடிவில் ஏழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த குகை சுமார் 6 அடி அகலம் கொண்டது. சுயம்பு லிங்கமாக அவதரித்த காரணத்தினால் இங்கு சிவபெருமானுக்கு “சுயம்புமூர்த்தி” என்றொரு பெயரும் உண்டு. மேலும், அங்கு 5-வது மலையில் காணப்படும் மணல் சாம்பல் நிறத்தில் இருப்பதால் இம்மலையை திருநீர் மலை (எ) புனித சாம்பல் மலை என அழைக்கப்படுகிறது.

News February 16, 2026

கோவையில் குவிந்த பிரபலங்கள்!

image

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அவ்வகையில் கோவை அருகே வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷோ யோக மையத்தில் மாக சிவராத்திரி விழா இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகை தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

News February 16, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 16, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!