Coimbatore

News April 2, 2024

100% வாக்குப்பதிவு குறித்து மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் மணிவேல் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

கோவையில் கத்திரி வெயில் ஆரம்பம்

image

கொங்கு மண்டல பகுதிகளில் வரும் 20 நாட்களுக்கு, 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும், கோவையில் 37-39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இதனால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் தேவையான நீர் உட்கொள்ள வேண்டும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.

News April 2, 2024

பிரதமர் மோடி ஏப்.10ல் மீண்டும் கோவை வருகை?

image

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி ஏப்.,9 ஆம் தேதி பெரம்பலூர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பேச உள்ளதாக கோவை பாஜக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News April 2, 2024

மது அருந்தும் போது தகராறு – இருவருக்கு அடி, உதை

image

மேட்டுப்பாளையம் மதினா நகர் அருகே, ஊட்டியை சேர்ந்த சதீஷ்குமார், இளங்கோவன் உள்ளிட்டோர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் சதீஷ்குமார் மது பாட்டிலை உடைத்து அப்பகுதியில் வீசியுள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ், அசாருதீன், அன்வாஸ் முகைதீன், அபிபூர் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் தட்டி கேட்ட போது தகராறு ஏற்பட்டு இருவரையும் தாக்கியுள்ளனர். இப்புகாரின் பேரில் போலீசார் 6 பேரையும் நேற்று கைது செய்தனர்.

News April 2, 2024

கோவை: சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 101.12 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 1, 2024

பூத் சிலிப் வழங்கிய ஆட்சியர்

image

கோவை, புலியகுளம் பகுதியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024ல் வாக்காளர் வாக்களிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.1)நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி துணை ஆணையர் செல்வ சுரபி ஆகியோர் உள்ளனர்.

News April 1, 2024

கோவையில் மாத இறுதியில் மழைக்கு வாய்ப்பு 

image

கோவையில் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் கோவையில் அடுத்த 10 முதல் 17 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என கோவை வெதர்மேன் சந்தோஷ் கூறியுள்ளார். மேலும், ஏப்ரல் இறுதி வாரத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே மாதம் தொடக்கத்தில் நல்ல மழை இருப்பதாக தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

News April 1, 2024

இளநீரின் பண்ணை விலை உயர்ந்தது

image

ஆனைமலை தாலுகா பகுதியில் இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்ந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இளநீர் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளதால், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 36 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.14000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

News March 31, 2024

மருதமலை அடிவாரத்தில் அண்ணாமலை நாளை பிரச்சாரம்

image

கோவை தொகுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் நாளை (ஏப்.1) காலை 6.30 மணிக்கு கோவை பாராளுமன்றத்துக்கு உட்பட்ட கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, மருதமலை அடிவாரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார். இதனை முன்னிட்டு அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட பாஜக தலைவர் J.ரமேஷ் குமார் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News March 31, 2024

கோவையில் பாதிரியர்கள் கைது

image

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ., பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயம் உள்ளது. இங்கு பணியாற்றிய சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய பாதிரியர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தேவாலயத்தின் உள்ளே திடீரென வந்து கதவு மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்து சூறையாடினர். பின் நேற்று அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் 2 பாதிரியர்களை கைது செய்தனர்.

error: Content is protected !!