Coimbatore

News April 6, 2024

மூத்த குடி மக்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கலாம்

image

கோவையில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மற்றும் ஏப்ரல்.09ஆம் தேதி ஆகிய தேதிகளில் மேற்படி வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த வசதியினை பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் அவர்களது இல்லங்களில் இருந்தே வாக்கு செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News April 6, 2024

அண்ணாமலை மீது அதிமுகவினர் புகார்

image

கோவை தொட்டிபாளையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த சமயத்தில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை அதே நேரத்தில் எவ்வித அனுமதி பெறாமல் அதிமுகவிற்கு தேர்தல் பரப்புரை செய்ய வழங்கப்பட்ட நேரம் மற்றும் பகுதியில் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் கரும்பத்தம்பட்டி காவல் நிலையத்தில் இன்று (ஏப்ரல்.06) புகார் அளித்தார்.

News April 6, 2024

கோவை: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவையில் 224 மற்றும் பொள்ளாச்சியில் 140 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஏதும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

பள்ளி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்

image

மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் அருகே உள்ள புளியந்தோட்டத்தை சேர்ந்தவர் ராமன்(33). இவர் தனது உறவினரான பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. மாணவி படிக்கும் பள்ளிக்கு வழக்கமான ஆய்வுக்காக சென்ற சுகாதார செவிலியரிடம் மாணவி அளித்த தகவலின் பேரில் உறவினரான ராமன் நேற்று மேட்டுப்பாளையம் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

News April 6, 2024

வாக்கு பதிவு இயந்திரங்கள் கோவை வருகை

image

கோவை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, சுயேச்சை என 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும். அதன்படி கோவை மக்களவை தொகுதியில் 3 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. எனவே, திண்டுக்கல்லில் இருந்து நேற்று ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

News April 6, 2024

வரும் ஏப்.10 ல் பிரதமர் மோடி காரமடை வருகை

image

வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் நீலகிரி தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை தொகுதியில் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வரும் ஏப்.10ஆம் தேதி பாரத பிரதமர் மோடி காரமடை அருகே உள்ள தென்திருப்பதி நால்ரோடு டிகேவி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News April 5, 2024

பணப்பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு கூட்டம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் புலனாய்வு பிரிவு, மத்திய மாநில கலால் பிரிவு, வருமானவரித்துறை உள்ளிட்ட அமலாக்கத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வட்டாட்சியர் தணிகைவேல், வங்கியாளர்கள் இருந்தனர்.

News April 5, 2024

கோவையில் இன்றைய வெயில் நிலை எவ்வளவு

image

கோவையில் கத்திரி வெயில் துவங்கியுள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் உள்ள வானிலை மையத்தில் இன்று (ஏப்ரல்.05) வெப்பம் 39.8 C ஆக இருந்துள்ளது மேலும் வரும் திங்கள் வரை வானிலை கோவையில் 38 C முதல் 40 C வரை இருக்கும். ஏப்ரல் 9 தேதிக்கு பின்னர் வெப்பம் 36 C முதல் 37 C வரை இருக்கும். ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை அதிகாரிகளின் கூறினார்.

News April 5, 2024

2024 தேர்தலில் சிறப்பு தொகுதியான ‘கோவை’

image

கோவை தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களாக 18-19 வயது நிரம்பியவர்கள் 31ஆயிரத்தி 382 பேர் உள்ளனர். அதைபோல் 20-29 வயது உடையவர்களாக 3 லட்சத்து 18ஆயிரத்து 145 வாக்காளர்கள் உள்ளனர். இதனால் இளம் வாக்காளர்களின் ஓட்டுகள் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் இந்த தேர்தல் அமைந்துள்ளது.

News April 5, 2024

கோவை: மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு

image

கோவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரியில் நடைபெற உள்ளது. அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (ப) ஆசிக் அலி, துணை ஆணையர் சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!