India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரியை சேர்ந்த ராமச்சந்திரன், கிருஷ்ணகிரியை சேர்ந்த அருண்குமார். இருவரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்வது தொடர்பாக இருவருக்கும் நேற்று(ஏப். 6) வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் கத்தியால் ராமச்சந்திரனை குத்தியுள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை பெரிய கடை வீதியில் நகை கடை நடத்தி வரும் அர்ஜுன் கௌதமிடம் மஹா.,வை சேர்ந்த அங்கீத், துஷார் பவார், சங்கீத் பன்சால், பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். பாண்டுரங்கனை தவிர மற்ற மூவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு நின்றுள்ளனர். சந்தேகமடைந்த கௌதம் கடையின் இருப்பை சோதித்த போது 3 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதை செயல்படுத்துகிறதா என உறுதி செய்வதற்காக கோவை தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி, துணை ஆய்வாளர் சுப்ரமணியம் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் 50% க்கும் கீழ் வாக்குப்பதிவு குறைந்த 215 இடங்களில் வீடு, வீடாக விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றதாக ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள https://affidavit.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
கோவை கரும்புக்கடை பூங்கா நகர் மஸ்ஜிதுல் பள்ளிவாசலில் பாரதமாதா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌரிசங்கர் தலைமையில் நேற்று மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேச இயலாத, பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், 2 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
நெல்லித்துறையை சேர்ந்த சுரேஷ்குமார், அரவிந்த் என்பவருடன் இணைந்து பாக்கு மட்டை மிஷின் வாங்கி அடித்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் தொழிலில் இருந்து விலக முடிவு எடுத்து மிசின் வாங்க கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதி கொண்டனர். இப்புகாரின் பேரில் சுரேஷ்குமார், உதயகுமார், ஐயப்பன் உட்பட 7 பேரை இன்று போலீசார் கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு, தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் தங்களது பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறையை வழங்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு விடுமுறை தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதை தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாடு அறைக்கு 94453-98752, 0422-2241136, 99426-64066 தொடர்பு கொள்ளலாம்.
இனம், மொழி, ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தும் குடும்ப கட்சிகளின் தேர்தல் அறிக்கை போல காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மருத்துவக் கல்வி, இட ஒதுக்கீடு முறையை சீர்குலைக்க முயற்சிக்கிறது காங்கிரஸ், எனவும் இன்று (ஏப்ரல்.06) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.