India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுப்பது போல் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல் துறையின் விசாரணையின் அடிப்படையில், இந்த வீடியோ ஜூலை 2023-க்கு உரியது என்றும், எனவே தேர்தல் விதிமுறைகளின் வரம்பிற்குள் வராது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஜெய்ஷித்தல் முண்டே, ரிஷிகேஷ் ரமேஸ்வரர் குட்டே படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் டீ குடிப்பதற்காக வெளியே சென்று விட்டு பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் பைக்கில் வந்து கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச்.29) அவருடைய எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் நடத்தை விதி (MCC) மீறல்கள் தொடர்பான புகார்களை, பொதுமக்கள் “civil investigator” செயலி (App) மூலம் அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா 18004251215 என்ற தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். புகார்கள் உடனடியாக பறக்கும் படை குழுக்கள் மூலம் விசாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி தேனாடுகம்பை காவல்துறையினர் அவர் மீது இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 25ம் தேதி கடநாடு கிராமத்தில் முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக, எல்.முருகன் மீது தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கடைபிடிப்பது வழக்கம். அதில் ஒரு உத்தி தான் வாக்காளர்களை குழப்பி வாக்குகளை சிதறடிக்க ஒரே பெயரில் பலரை களம் இறக்குவது. அதன்படி கோவை திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை குறி வைக்கும் விதமாக, 5 பேர் ராஜ்குமார் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்து களமிறங்கி உள்ளனர். இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் அதிமுக ஆட்சி காலத்தில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார் ஏதும் இருந்தால் 94896-87740, 94862-68740, 94896-81740 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல், பரிசீலனை அனைத்தும் முடிவுற்று பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை, நீலகிரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப். 29 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கோவை மக்களவைத் தொகுதியில் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் கிராந்தி குமாரிடம் கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க செயலாளர் க.பாலாஜி இன்று மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவையில் 108 அவசர ஊர்திகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஜனநாயக கடமையாற்ற முடிவதில்லை. எனவே தபால் ஓட்டுரிமையை எங்களுக்கும் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.