Coimbatore

News April 9, 2024

தேர்தல் விதி முறைகள் மீறியதாக முதல்வர் மீது புகார்

image

கோவையில், கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்படும் வகையில் உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக நிர்வாகி இன்பதுரை இன்று புகாரளித்துள்ளார். அந்த புகாரில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜா, உதயநிதி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் என்று கூறியுள்ளார்.

News April 9, 2024

கோவை: தங்க மோசடி செய்த தம்பதி

image

கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் மாயாண்டி (48). நகைப்பட்டறை உரிமையாளரான இவர் கோவை ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த சிவக்குமார், கனகலட்சுமி தம்பதியிடம் 2022 ஆம் ஆண்டு நகை செய்து தர 1 கிலோ தங்கம் தந்தார். அவர்கள் 350g தந்து விட்டு மீதம் 650g தங்கத்தை தராமல் காலம் கடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மாயாண்டி கடைவீதி போலீசில் அளித்த புகாரின் பேரில் தம்பதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News April 9, 2024

பிரதமர் வருகை: கோவையில் ரெட் ஜோன்

image

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவிற்கு இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 9, 2024

இரண்டு வாக்குச்சாவடிகள் இடமாற்றம் – கோவை ஆட்சியர்

image

பொள்ளாச்சியில் இரு வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்றி வெளியிட்ட செய்தி குறிப்பில், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட குறிச்சி பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பாகம் எண் 140, 141 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணைய உத்தரவின்படி போத்தனூர் ரயில்வே சிபிஎஸ்இ பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

பொள்ளாச்சி அருகே ரூ.32 கோடி பறிமுதல்?

image

பொள்ளாச்சி அருகே பிரபல கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அங்கு கணக்கில் வராத 32 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. விடிய விடிய நடந்த சோதனையில் கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

News April 8, 2024

ட்ரோன்கள் பறக்க காவல்துறை தடை

image

கோவை: காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் பிரதமர் மோடி வரும் 10ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து எஸ்.பி பத்ரி நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், தென்திருப்பதி நால்ரோட்டை சுற்றி 5 கி.மீ சுற்றளவிற்கு பிரதமர் வரும் வழித்தடத்தில் வரும் 9, 10ஆம் தேதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

News April 8, 2024

தேங்காய் நாரில் தேர்தல் விழிப்புணர்வு

image

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (8.04.2024) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேங்காய் நாரினைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு விழிப்புணர்வு சின்னத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 8, 2024

ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

வால்பாறையில் துணிக்கடை நடத்தி வருபவர் சுதீர். இவரது தங்கை மகன் ஷியாம். வால்பாறையில் உள்ள துணிக்கடை, உணவகங்களை நிர்வகித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 8, 2024

பிசிசிஐயிடம் நிதி வாங்கித் தருகிறோம்!!

image

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சரவணம்பட்டி பகுதியில் அவர் பேசியதாவது, ‘கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முன் சாலை வசதியை ஏற்படுத்தித் தாருங்கள், கிரிகெட் மைதானம் அமைக்க பிசிசிஐயிடம் நாங்கள் நிதி வாங்கித் தருகிறோம்’ என்றார்.

News April 7, 2024

கோவை வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு செய்துள்ளது திமுக என்று இருந்தது. அதற்கு வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை. மேலும் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என்றார்.

error: Content is protected !!