Coimbatore

News April 18, 2024

கோவையில் நாளை இலவச ரேபிடோ சேவை

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற CODE -ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

News April 18, 2024

கோவை: மாயமான 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர்

image

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி விட்டனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. சகோதரரை மீட்டு தரக்கோரி விவசாயி திருமலை என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் காவல்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை ஜூன் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 18, 2024

அண்ணாமலை க்காக விரலை வெட்டிய நபர்

image

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்ட 10 நாட்களாக கோவையில் தங்கி ஆதரவு திரட்டி வருகிறார் துரைராமலிங்கம். இவர் நேற்று பிரச்சாரம் முடிந்த நிலையில், அண்ணாமலை தோற்று விடுவார் என சிலர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த துரை ராமலிங்கம், அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறி கத்தியை எடுத்து அவரது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.

News April 18, 2024

வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி

image

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஏப்ரல்.18) கோவை மாவட்டத்தில் 3096 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறிப்பிட்ட மையத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இந்த இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

News April 18, 2024

கோவை: போலி ஆவணம் தயாரித்து ரூ.300 கோடி மோசடி

image

கோவையை சேர்ந்தவர் சிவராஜ். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர் சிவராஜ்-க்கு சொந்தமான 100 கோடி ரூபாய் ரொக்கத்தையும், சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களையும் போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்துள்ளனர். இது குறித்து கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இன்று(ஏப்.17) ஷீலா, அவரது மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.

News April 18, 2024

பாதுகாப்பு பணியில் 20,500 போலீசார்

image

மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 மக்களவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு மண்டல மாவட்டங்களில் 20,500 போலீஸாா் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா்” என தெரிவித்தார்

News April 18, 2024

வெளியூரை சேர்ந்தவர்கள் வெளியேற அறிவுறுத்தல்

image

கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கோவை மாவட்டத்தில் மக்களவை தோ்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதன்பின், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என அனைத்து கட்சியினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசாரத்துக்காக வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

News April 18, 2024

கோவையில் நாளை இலவசம் அறிவிப்பு

image

நாளை தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை ஆதார் அட்டையுடன் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளை கட்டணமின்றி அழைத்துச் செல்ல அரசு டவுன் பஸ் ஊழியர்களுக்கு கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

News April 18, 2024

பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட ராமர் படம் பறிமுதல்

image

கோவையில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ராமா் படத்துடன் தாமரை சின்னத்தை அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதாக நேற்று பறக்கும் படையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற பறக்கும் படையினர் பாஜகவினரிடமிருந்து தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட ராமா் படங்களை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News April 17, 2024

கோவை: மரங்களை வெட்ட எதிர்ப்பு – முதல்வருக்கு மனு

image

ஆனைமலை – தாத்தூர் சாலையில் 100க்கும் அதிகமான புளிய மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துகள் அதிகம் நடைபெறுவதாக கூறி இந்த சாலையோர புளிய மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஏப்ரல் 17) முதல்வர் ஸ்டாலினுக்கு, நெடுஞ்சாலை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு பொள்ளாச்சி தபால் நிலையத்திலிருந்து மனு அனுப்பினர்.

error: Content is protected !!