India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கோவையில் இருந்து ஏப்.23 முதல் ஜூன்.25 வரை கோவை விடுமுறையை முன்னிட்டு கோவை – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் , நெல்லூா், விஜயவாடா, முனிகுடா , சம்பல்பூா் , ரூா்கேலா, ஹாட்டியா, தன்பாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திமா நகரை சேர்ந்த தாமஸ் வில்லியம், சரவணம்பட்டி பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாரா விதமாக ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மூன்று கார்கள், இரு டூவீலர்கள் தீயில் எரிந்து நாசமாயின.
கோவை காந்திமா நகரை சேர்ந்த தாமஸ் வில்லியம், சரவணம்பட்டி பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாரா விதமாக ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மூன்று கார்கள், இரு டூவீலர்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இன்று, (ஏப்ரல் 21, 2024) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இன்று கோவை மாநகரில் இறைச்சி கடைகளை மூட கோவை மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் என்று தெரிவித்துள்ளார். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள Strong ரூமில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சீல் வைத்தார்.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு , வேலந்தாவளம் , மேல்பாவி , முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம் நடுப்புணி , ஜமீன்காளியாபுரம் , வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி பர்கூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் திருப்பதி. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு மோசடி வழக்கில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு 2022ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவருக்கு சிறையில் மூச்சு திணறல் ஏற்பட்டது. கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் 71.17% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 72.22%, நீலகிரியில் 71.7 % வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவை தொகுதியில் 104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்துள்ளார். கோவை கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி 104 வயதில் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளார்.
கோவை குனியமுத்தூரரை சேர்ந்தவர் முருகானந்தம்(28). இவரது மனைவி ரோஹினி(26). இவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.