India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இன்று (10.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 மாணவர்களும் தற்போது நலமுடன் உள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து மாணவர்களும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பாக உள்ளனர்; மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடல்நிலை சீரானதும் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

கோவை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

தமிழகத்தில் நாளை (மார்ச் 11) 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. கோவையில் 509 பள்ளிகளைச் சேர்ந்த 18,861 மாணவர்கள், 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 பேர் மற்றும் 1,237 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதியை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அவர் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

கோவை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (10.03.2026) முதல் செல்போன் பயன்படுத்த கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜகோபுரம் முதல் அனைத்து சன்னதிகள் மற்றும் வளாகம் முழுவதும் செல்போனில் பேசவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. பக்தர்கள் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, அமைதியான முறையில் தரிசனம் செய்ய ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவையில் மார்ச் 11-ல் தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 509 பள்ளிகளைச் சேர்ந்த 38,390 மாணவர்கள் 159 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க 250 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 949 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஈரான் -இஸ்ரேல் போர் காரணமாக கோவை ஷார்ஜா மற்றும் கோவை- அபுதாபி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்.
கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3:10 மணிக்கு புறப்பட்ட விமானம் கோவை வந்தடைந்தது. அதேபோல அதிகாலை 3.50 மணிக்கு கோவையில் இருந்து ஒரு விமானம் ஷார்ஜா புறப்பட்டு சென்றது.
Sorry, no posts matched your criteria.