India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு , வேலந்தாவளம் , மேல்பாவி , முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம் நடுப்புணி , ஜமீன்காளியாபுரம் , வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி பர்கூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் திருப்பதி. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு மோசடி வழக்கில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு 2022ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவருக்கு சிறையில் மூச்சு திணறல் ஏற்பட்டது. கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் 71.17% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 72.22%, நீலகிரியில் 71.7 % வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவை தொகுதியில் 104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்துள்ளார். கோவை கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி 104 வயதில் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளார்.
கோவை குனியமுத்தூரரை சேர்ந்தவர் முருகானந்தம்(28). இவரது மனைவி ரோஹினி(26). இவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் அழகப்பா சாலையில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலுக்கு வாக்களிக்க, சுகுணாபுரம் பகுதியில் வசித்து வரும் 102 வயது மூதாட்டி முத்தாயம்மாள் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் உதவியுடன் வீல் சேரில் வந்து வாக்களித்தார். இதை பற்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாவது, வாக்களிப்பது என்னுடை உரிமை என்று மூதாட்டி கூறியதாக தெரிவித்தனர்.
கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இன்று (ஏப்ரல். 19)கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்திகுமார் பாடி நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, அனைத்து குடிமகன்களும் தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
கோவையின் பல்வேறு பகுதிகளில் காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
கோவை தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் பாஜகவினர், வாக்காளர்களுக்கு G-Pay மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, திமுக வழக்கறிஞர் அணியினர் சார்பில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிராந்திகுமார் பாடியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.