India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையில் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக, அதிமுக சார்பில் பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமடைந்துள்ளது. உக்கடம், செல்வபுரம், கோட்டைமேடு பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கன்களைக் கொடுத்து பொருட்களை வாங்கி சென்றனர். திமுக சார்பில் சில்வர் அண்டாக்களும், அதிமுக சார்பில் குடை மற்றும் ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன. தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கோவை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

கோவை, கோவைப்புதூர் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் செந்தில்குமார், அங்குள்ள பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை தனியார் மருத்துவமனையில் 1971-ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரில் தீரத்துடன் பணியாற்றிய போா்க்கால நாயகன் ஓய்வுபெற்ற பிரிகேடியா் வி.ஆா்.சுவாமிநாதன் (94) வயது முதிா்வு மற்றும் உடல்நலம் சாா்ந்த குறைபாடுகளால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்த வி.ஆா்.சுவாமிநாதன், கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் காலமானார்

கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று விடுத்த அறிக்கையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகார்களை வழங்கல் பிரிவு, குற்றப்புலனாய்வு துறையினரிடம் தெரிவிக்கலாம் அல்லது கட்டுப்பாட்டு அறை எண் : 0422 – 2300 569 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரேமலதா, தனது காதலன் ராம்குமார் என்பவருடன் ராயல் என்பீல்டு வாகனத்தில் திருமூர்த்திமலைக்குச் சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கோகுல் ஓட்டி வந்த கார் அதிவேகமாக மோதியதில், பிரேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராம்குமார் உடுமலை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தன்பாத் மற்றும் போத்தனூர் இடையே புதிய அம்ருத் பாரத் ரயில் சேவை மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வண்டி எண் 16619 சனிக்கிழமைகளில் காலை 6:15க்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 4:00க்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, வண்டி எண் 16620 திங்கட்கிழமைகளில் மதியம் 2:00க்கு தன்பாத்திலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 11:20க்கு போத்தனூர் வந்தடையும். இது கோவையில் நின்று செல்லும்.

தன்பாத் மற்றும் போத்தனூர் இடையே புதிய அம்ருத் பாரத் ரயில் சேவை மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வண்டி எண் 16619 சனிக்கிழமைகளில் காலை 6:15க்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 4:00க்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, வண்டி எண் 16620 திங்கட்கிழமைகளில் மதியம் 2:00க்கு தன்பாத்திலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 11:20க்கு போத்தனூர் வந்தடையும். இது கோவையில் நின்று செல்லும்.

தன்பாத் மற்றும் போத்தனூர் இடையே புதிய அம்ருத் பாரத் ரயில் சேவை மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வண்டி எண் 16619 சனிக்கிழமைகளில் காலை 6:15க்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 4:00க்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, வண்டி எண் 16620 திங்கட்கிழமைகளில் மதியம் 2:00க்கு தன்பாத்திலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 11:20க்கு போத்தனூர் வந்தடையும். இது கோவையில் நின்று செல்லும்.
Sorry, no posts matched your criteria.