India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் அக்னி வீர வாயு (இசைக்கலைஞர்) தேர்வுக்கு பெங்களூரில் அமைந்துள்ள 7 வது ஏர் மேன் தேர்வு மையத்தில் வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. வரும் ஜூன் 5ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 12-10-2013ஆம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுவனை போத்தனூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து கொலை செய்து எரித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிறுவர்கள் இரண்டு பேருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை ஜெ.எம். 4-வது கோர்ட்டு நீதிபதி சரவணபாபு நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (42). நேற்று மாலை அவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று 100 அடி ஆழமுள்ள அவரது வீட்டு கிணற்றில் விழுந்துள்ளது. அதனை மீட்பதற்காக கார்த்தி கிணற்றுக்குள் இறங்கியபோது தவறி 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்துள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் கார்த்திக் மற்றும் ஆட்டுக்குட்டியையும் மீட்டனர்.
கோவை எஸ்பி அலுவலகம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடந்த மே.1 ஆம் தேதி முதல் இன்று வரை 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 93 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில், தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். வயல்களில் அதிக நீர் தேங்காமல் உரிய வடிகால் வசதி செய்து, நீர்ப்பாசனம், உரமிடுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கோபியில், காலாவதியான ஆவின் பிஸ்கட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில், தவறு செய்த ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில், ஆவின் நிறுவனமும் காலாவதியாகி விடும். இதுபோன்ற செயல்களால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கும். முதலமைச்சர் இதில் தலையிட்டு ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோவை ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சென்னை-கொச்சுவேலி சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் கோவை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று பொள்ளாச்சி மற்றும் கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை எஸ்ஐ கார்த்திக், டிராபிக் வார்டன் பிரபு தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் இன்று(மே 28) தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பைக்கில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வு கூட்டம் நேற்று(மே 27) ஆட்சியா் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. அப்போது கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூா், சூலூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தலா 14 மேஜைகள், பல்லடம் தொகுதிக்கு 18 மேஜைகள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேஜைகள் என மொத்தம் 101 மேஜைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.
Sorry, no posts matched your criteria.