Coimbatore

News May 8, 2024

வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி வகுப்புகள்

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தின் தாரை உயிரித் தொழில்நுட்பத் துறையில் இன்றும், நாளையும் டிஎன்ஏ கைரேகையின் அடிப்படைகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சித் திட்டம் ஏற்பாடு இன்று செய்யப்பட்டது. பிஎச்டி மாணவர்கள் அடங்கிய இந்தப் பயிற்சித் திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மொத்தம் 17 பேர் கலந்துகொண்டனர்.

News May 8, 2024

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

image

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் இன்று தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் என பலரும் கலந்து கொண்டனர்.

News May 8, 2024

போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

image

செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரவிக்குமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர். இவ்வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று ரவிக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News May 8, 2024

கோவை மாவட்ட ஆட்சியரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொருளாளர் ஆறுமுகம் கோவை மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள உள்ள மனுவில் கோவை மலுமிச்சம்பட்டி அன்பு நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் உடனடியாக அன்றாட தேவைகளுக்கான தண்ணீர், குடிநீர், திடக்கழிவு தொட்டிகள் (செப்டிக் டேங்க்) சுத்தம் செய்தல், குப்பைகளை அப்புறப்படுத்துதல் பராமரிப்புப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

News May 8, 2024

தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி

image

கோவை பீளமேடு பகுதியில் சிவராஜ் என்பவரின் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்த 13 பேர், ரூ.200 கோடி சொத்துகளுக்கு போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து ரூ.100 கோடி பணத்தையும் மோசடி செய்துள்ளனர். இது குறித்து சிவராஜ் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். விசாரணையில், ரூ.12 கோடி, 140 பவுன் நகை, ரூ.100 கோடி ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

News May 8, 2024

பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை

image

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நீதிமன்றங்களிலும், சட்ட உதவி மற்றும் சட்ட அறிவு பெறவும், பொதுமக்களுக்கு அவற்றை இலவசமாக எடுத்துரைப்பதற்காக 50 “சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இவர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குவார்கள் என  நீதிபதிகள் தெரிவித்தனர்.

News May 7, 2024

உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

image

கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் இன்று பல்வேறு இடங்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், ரோஸ்மில்க் , பாதாம் கீர், எவ்வித லேபிள் விபரம் இல்லாத குளிர்பானங்கள், தர்பூசணி மற்றும் இதர பழங்கள், பதநீர் மற்றும் கரும்புச்சாறு, பானிபூரி, போன்றவைகளை கள ஆய்வு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

News May 7, 2024

கோவையின் அழகிய வால்பாறை தலம்!

image

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது. இதில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்தியாவிலேயே இங்கு தான் அதிக மழைப்பொழிவவு ஏற்படும். இம்மலைத்தொடர் தேயிலை தோட்டங்கள், பல நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள், மாசற்ற சுற்றுசூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் உள்ளன. சிறந்த சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. பொள்ளாச்சிக்கு 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

News May 7, 2024

கோவையில் நாளை வழிகாட்டி நிகழ்ச்சி

image

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நாளை (08/05/24) பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோவை,இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.30 முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் துறை சார்ந்த வல்லுனர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த துறையில் என்ன வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை , வங்கி கடன் பெறுவது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

News May 7, 2024

மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொது தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 9ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!