India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை சரகத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு உள்பட போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவை எப்படி உள்ளது என்பது பற்றி கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். விபத்துக்கள் மூலம் கடந்த 2023ஆம் ஆண்டில் 819 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை விபத்தில் 685 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
கோவை சாய்பாபா கோவில், மெக்ரிகர் சாலை மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு வரும் 11ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது. அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு வரும் 11ஆம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முதல்கட்ட நேர்முகத் தேர்வு நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 12ஆம் தேதி கோவையில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13 முதல் மே 15 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அன்னூர் அருகே சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த வங்கதேச இளைஞர்கள் 2 பேரை போலீசார் (மே.9) கைது செய்தனர். மாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சட்ட விரோதமாக தங்கி வங்கதேச இளைஞர்கள் பணியாற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பணியாற்றி வந்த முகமது அர்ஜு (26), போலாஸ் பர்மன்(28) இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சிங்கப்பூர் – கோவை விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு வந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,ஒரு பயணி நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.அவரிடமிருந்து ரூ.90 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவரின் விபரம் அதிகாரிகள் வெளியிடவில்லை.
கம்போடியாவில் இருந்து கடந்த 5ம் தேதி, கோவைக்கு வந்த விமானத்தில் இரு பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய புலனாய்வு பிரிவு போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்கள் உடமைக்குள் ரூ.4.48 லட்சம் மதிப்பிலான 26 ஆயிரத்து, 400 சிகரெட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம்
தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒய்வு கால முதியோர் இல்லங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும். எனவே உரிய ஆவணங்களுடன் சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையில் நடப்பாண்டில் சேர்க்கைக்காக எம்.எஸ்சி செயற்கை நுண்ணறிவு என்ற புதிய பாடத்தைத் தொடங்கியுள்ளது. M.Sc செயற்கை நுண்ணறிவு 2 ஆண்டுகள் படிப்பில் சேர தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இன்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் 06.05.2024 முதல் 06.06.2024 வரை பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று மே.8 வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே.10)ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது மேலும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள இளைஞர்களை பலர், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும் அதிக சம்பளம் எனக் கூறியும், அழைத்து சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் எனவே வெளிநாடு செல்பவர்கள் நன்கு ஆராய்ந்து பின் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.