India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகாரட்சியில் தொடர் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் மேயராக இருந்த கல்பனா கடந்த 3 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இன்று(ஜூலை 8) மாநகாரட்சி கூட்டம் கூடியது. இதில் மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. ராஜினாமா கடிதத்தை வாசிக்கும்போது திமுக – அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 9 நிமிடங்களில் சிறப்பு கூட்டம் முடிவடைந்தது.
கோவை மாநகர், மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நேற்று(ஜூலை 7) நடைபெற்றது. அப்போது பேசிய சுப்பிரமணியம், பிரிவினையை தூண்டும் விதமாக பேசிய தேவாலய போதகா் மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து வரும் 21 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பேசினார்.
கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 10 குழுக்களாக பிரிந்து பானிபூரி கடைகளில் நேற்று(ஜூலை 7) ஆய்வு நடத்தினர். அதன்படி மாவட்டத்தில் இதுவரை 73 கடைகளை ஆய்வு செய்து, அதில் 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 4 உணவு மாதிரிகளும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகித்திற்காக 6 கடைகளுக்கு அபராதமாக ரூ.12 ஆயிரமும் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக தென்காசியில் மழை பெய்து வருகிறது. மேலும், ஜூலை 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை எஸ் பி அலுவலகம் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த மே.1 ஆம் தேதி முதல் இதுவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 98 பேர் கைது செய்யப்பட்டு 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து சுமார் 1247.634 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், கோவையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, தொடக்க பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளது. உரிய சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜூலை.8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், கோவையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, தொடக்க பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளது. உரிய சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜூலை.8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வேளாண் பல்கலை நிர்வாகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், காளான், முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி கல்லூரி வளாகத்தில் வரும் ஜூலை 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில், உற்பத்தி குறித்த பயிற்சி, உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்படும். கட்டணம் ரூ.1770. மேலும், விபரங்களுக்கு 9488518268 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பல்கலைக்கழகத்தில் 08.07.2024 அன்று தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.590 கட்டணம் மற்றும் அடையாள சான்றை சமர்ப்பித்து கலந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.