India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொழில்வர்த்தக சபை பேரவை தீர்மானம்
➤திமுக பாஜக இடையே ரகசிய கூட்டணி- எடப்பாடி பழனிசாமி பேட்டி
➤கோவை மாநகர காவல்துறை ட்ரைக் பைக் என்ற புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது.
➤போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை- கோவை எஸ்பி எச்சரிக்கை
➤கோவை தெற்கு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கோவை எஸ்பி அலுவலகத்தில் இன்று மாலை விடுத்துள்ள செய்தி குறிப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையில் தயங்காமல் தகவல் தெரிவிக்க 94981-81212, 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை ட்ரைக் பைக் என்ற புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதில் நின்றபடியே ஓட்டும் வசதி இருப்பதால் காவல்துறையினர் கூட்டம் நிறைந்த பகுதிகளில் எளிதில் ரோந்து பணியில் ஈடுபட முடியும். அண்மையில் இந்த வாகனத்தை ஓட்டி திட்டத்தை கோவை சிட்டி கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை எலக்ட்ரிக் பைக்கில் போலீசார் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அக்சத், ஹரியானைவைச் சேர்ந்த சுமித்குமார். இவர்கள் 2 பேர் கோவையில் தனியார் பல்கலை.,யில் படித்து வருகின்றனர். நேற்று 2 பேர் நண்பர்களிடம் பைக் வாங்கி கொண்டு, வால்பாறைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியில் பைக் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் சுமித், அக்சத் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டத்தில் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொழில்வர்த்தக சபை பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழில் வர்த்தக சபை 43வது வருடாந்திர பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக பொள்ளாச்சியை தனி மாவட்டமாக வேண்டும் என்பதுதான். இதுகுறித்து மக்களாகிய நீங்கள் உங்கள் கருத்துகளை பதிவிடலாம்.
➤ரூ.1,919 கோடி செலவில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
➤கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க கோவை ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவு
➤வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்
➤கோவையில் விசாரணைக்கு பயந்து ஓடியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
➤இன்று சனிபிரதோஷம் முன்னிடு அனைத்து சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் மார்டின் குழுமம் செயல்பட்டு வருகின்றது. இதன் நிர்வாக இயக்குநர் சார்லஸ் மார்ட்டின், இன்று கேரள வயநாடு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாயும், வெள்ள நிவாரண மறுவாழ்வு இல்லம் கட்டுவதற்காக ரோட்டரி மூலம் ஒரு கோடி ரூபாய் என இரண்டு கோடியை இன்று திருவனந்தபுரம் முதல்வர் செயலகத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் கே.ஏ.குரியாச்சனிடம் வழங்கினார்.
மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக தங்களின் அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பெண்கள் குவிந்தனர். அது போன்ற எந்த முகாமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்த பெண்கள் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள அத்திக்கிடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 243 குட்டைகளும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 5 குளங்கள், ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 குளங்கள் என்று கோவை மாவட்டத்தில் 258 குளம், குட்டைகள் பாசன வசதி பெறுகிறது.
Sorry, no posts matched your criteria.