Coimbatore

News August 5, 2024

BREAKING கோவை மேயர் தேர்தல்: கவுன்சிலர் கண்ணீர்

image

கோவை மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பெண் கவுன்சிலர் மீனா லோகு கண்ணீர் விட்ட சம்பவம் நடந்துள்ளது. வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் முடிந்த நிலையில், கண்ணீருடன் காரில் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. கோவை மேயர் பதவியிலிருந்து கல்பனா ராஜினாமா செய்த நிலையில், திமுக சார்பில் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து?

News August 5, 2024

கோவை நகரை ஆளப்போகும் 2வது பெண்!

image

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருந்துவந்ததார். உடல்நிலை சரியில்லை என தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் வேட்பாளராக 29வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வெற்றி பெற்றால் கோவையின் இரண்டாவது பெண் மேயர் என்ற பெருமையை பெறுவார். இது குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?

News August 5, 2024

BREAKING கோவைக்கு புதிய மேயர் இவர்தான்!

image

மேயர் பதவியை கல்பனா ராஜினாமா செய்த நிலையில், நாளை கோவை மாநகர மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி (29வது வார்டு கவுன்சிலர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி ரங்கநாயகி மேயராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.

News August 5, 2024

மேட்டுப்பாளையத்தில் தொட்டில் கயிறு இறுகி சிறுவன் உயிரிழப்பு

image

மேட்டுப்பாளையம் சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன்,  டிரைவிங் ஸ்கூல் மேனேஜர். இவரது மனைவி கங்காதேவி, மகன் சஷ்வந்த் (7). தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வந்தார் சஷ்வந்த். விடுமுறை தினமான நேற்றிரவு சஷ்வந்த் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் கயிறு இறுகியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 5, 2024

கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படலாம். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்கிறதா?

News August 4, 2024

கோவைக்கு புதிய மேயர் அறிவிக்க வாய்ப்பு

image

கோவை மாநகராட்சி புதிய மேயர் யார் என்பதை திமுக தலைமை இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததால், புதிய மேயருக்கான தேர்தல் ஆக.6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கவுள்ளது. இந்நிலையில், மேயர் பதவியை கைப்பற்ற, பெண் கவுன்சிலர்களிடையே பலத்த போட்டி நிலவுவதாகவும், அமைச்சர்கள் மூலம் பலர் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

News August 4, 2024

எதிர்ப்பார்ப்பில் கொங்கு மண்டலம்

image

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கை அத்திக்கடவு-அவிநாசி திட்டம். அதிமுக ஆட்சியில் ரூ.1,652 கோடியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 1,045 குளங்களும், 24,468 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். ஆனால், தற்போது வரை இத்திட்டம் 93% பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டம் எப்போது முழுமை பெறும் என கொங்கு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

News August 4, 2024

கோவையில் கிருஷ்ணசாமி  அறிக்கை

image

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று அறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் அருந்ததியர் பட்டியலின வகுப்பினருக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீடுகளுக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக கிடைத்த தீர்ப்பை ஆகஸ்ட் புரட்சி எனக் கொண்டாடும் வீரமணி உள்ளிட்டோர், அத்தீர்ப்பில் உள்ள ‘க்ரீமிலேயர் ‘ குறித்தான தீர்ப்பையும் கொண்டாட வேண்டும் என்றார்.

News August 4, 2024

கோவையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

கேரளா, கர்நாடக, ஆந்திராவுடன் இணைந்து தமிழ்நாடு வனத்துறை கடந்த வாரம் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தமிழகத்தின் காட்டுயானைகள் கடந்தாண்டை விட அதிகரித்து வந்துள்ளது. அதை தொடர்ந்து கோவையில் கடந்த ஆண்டை விட யானைகளின் எண்ணிக்கை 243 அதிகரித்து 566 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 3063 யானைகள் இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

News August 4, 2024

கோவை சரகத்திற்கு புதிய ஐ.ஜி நியமனம்

image

17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், கோவை ஐ.ஜியாக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி சென்னை பெருநகர ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் கே.பவானீஸ்வரி மாற்றப்பட்ட நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி டி.செந்தில் குமார் கோவை சரக ஐ.ஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!