India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டத்துறை 3ஆவது மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை திட்டம் நிறைவேறினால் அதனை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் இன்று (18.01.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுமார் 40 வயதுடைய இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், காணும் பொங்கலுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.2 கோடி வசூலாகியுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் அன்று ஒரு நாளில் இயக்கப்பட்டன. அன்று இயக்கப்பட மாநகரப் பேருந்துகள் மூலம் சுமார் ரூ.2.06 கோடி வசூலாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்களுக்காக, போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. GST ரோடு, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, OMR மற்றும் ECR சாலைகளில் வரும் 20ஆம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. GST சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (17.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை காவல்துறை சார்பில் நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்கு பணம் கொடுப்பதாக வரும் குறுஞ்செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம். இதுபோன்ற பணமோசடிகளைத் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930ஐ என்ற எண்ணை டயல் செய்யுங்கள். அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எங்கள் தலைவரின் பெயரை உச்சரிக்காமல் உலக அரசியலும் கிடையாது. தமிழ்நாடு அரசியலும் கிடையாது. திமுகவிலிருந்து MGR வெளியேறிய பிறகு, கலைஞர் அமைச்சராகவும் இல்லை, முதலமைச்சராகவும் இல்லை. அரசு ஊழியர்கள், பெண்கள், பாலியல் விவகாரம் என மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்” என்றார்.
மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெற்றோரை போலீசார் நேற்று (ஜன.16) கைது செய்துள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் சிறார் ஆபாச வீடியோ விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விசாரித்தபோது, சொந்த மக்களையே ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து விற்றது தெரியவந்தது. மகள் மட்டுமின்றி மகளின் தோழிகள் 6 பேரையும் இதில் ஈடுபடுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லாது. அதற்கு பதிலாக, ‘சிங்கார சென்னை கார்டு’ புழக்கத்திற்கு வரப்போகிறது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் மட்டுமல்லாமல், மின்சார ரயில்கள், அரசு பேருந்துகளில் கூட பயணம் செய்யலாம். இந்தக் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ரீசார்ஜ் செய்துகொண்டால் மட்டும் போதும். சிங்கார சென்னை கார்டிற்கு விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.