India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எம்.பி.ஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21வரை www.tancet.annauniv.edu விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்.எம் ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.90.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் கொள்ளை, திருட்டு, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் மாநகரங்களின் பட்டியலில் பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பது தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் உள்ள 120 நகரங்களில் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை, கொள்ளை, திருட்டு, உள்ளிட்ட விவரங்களின் படி சென்னை தான் பாதுகாப்பான இடமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
சென்னையில் இன்று (ஜன.19) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மக்களின் பிரதான போக்குவரத்தாக உள்ள மெட்ரோ ரயில்களில் தினமும் பயணம் செய்பவர்கள் க்யூ லைனை தவிர்க்க டிஜிட்டல் டிக்கெட் மற்றும் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வரும் ஏப்ரல் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லுபடியாகாது என தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ கார்டுகளுக்கு பதிலாக சிங்கார சென்னை கார்டை பயன்படுத்த தொடர்ந்து பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன நெரிசலை கட்டுப்படுத்த நாளை பகல் 2 மணி வரை ஜி.எஸ்.டி. சாலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., சாலைகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பரனூர் சுங்கசாவடி சர்வீஸ் சாலை வழியாக சென்று ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், புழல், திருவொற்றியூர், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. உங்க ஏரியாவில் மழையா?
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக, நாளை (ஜன.20) திங்கட்கிழமையன்று காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திரும்புவோருக்கு இந்தச் செய்தியை ஷேர் செய்யுங்கள்.
ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஸ்டாலின், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரை மர்ம கும்பல் துரத்திச் சென்று கொலை செய்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், இட்டைமலை சீனிவாசனிடம் தருண், சாலமன், இளங்கோ, ஜோகன், மாதேஷ் அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் இருவரையும் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.