Chennai

News January 24, 2025

சென்னை – குமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னை எழும்பூர் – குமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து இன்று (ஜன.24) இரவு 10:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு குமரி சென்றடையும். மறுமார்க்கமாக, குமரியில் இருந்து 26ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை (ஜன.27) 8:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சற்று நேரத்திலேயே முடிந்து விட்டது.

News January 24, 2025

கிண்டியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், இன்று (ஜன.24) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் டிகிரி படித்தவர்கள் பங்கேற்கலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

News January 24, 2025

சென்னையில் ட்ரோன் பறக்க தடை

image

குடியரசு நாளையொட்டி சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜன.25, 26) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரையிலும் அதேபோல் முதல்வர் இல்லம் முதல் மெரினா கடற்கரை வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2025

T20: இரவு 12:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவை

image

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, ஜனவரி 25ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக இரவு 12:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவையை நீட்டித்துள்ளது.

News January 23, 2025

கல்லூரி மாணவி கொலை வழக்கு – ஆஜர்படுத்த உத்தரவு

image

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலை மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சதீஷை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கில், புழல் சிறையில் இருந்து அவரை வரும் 29ஆம் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News January 23, 2025

குடியரசு தினம் – சென்னையில் ட்ரோன் பறக்கத் தடை

image

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பிப்ரவரி 23ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஜன. 26ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதையடுத்து, மெரினா கடற்கரை பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

News January 23, 2025

12,500 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை

image

பேருந்துகளில் சில்லறை தட்டுப்பாடு பிரச்னையை நிவர்த்தி செய்யவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என மூன்றிலும் பயணம் செய்யக்கூடிய வகையிலும் சிங்கார சென்னை பயண அட்டையை ஜன.6ம் தேதி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இதுவரை 12,500 பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2025

சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில், வரும் குடியரசு தினத்தையொட்டி தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யவும், முன்னேற்பாடுகளுடன் கூடிய நடவடிக்கைகளை செயல்படுத்திடவும் வேப்பரியில் இன்று (ஜன.23) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாசவேலை எதிர்ப்பு சோதனை, வெடிபொருள் கண்டறிதல் உள்ளிட்டவை மோப்ப நாய் மூலம் உரிய கருவிகளுடன் தணிக்கை செய்து உரிய பாதுகாப்பை கண்காணித்திட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News January 23, 2025

சீமான் வீடு முற்றுகையிட்ட 870 பேர் மீது வழக்கு பதிவு

image

சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை நேற்று (ஜன.22) முற்றுகையிட்ட 870 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தி, கோவை ராமகிருஷ்ணன் உட்பட 870 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்த அவதூறாக பேசிய சீமானை எதிர்த்து நேற்று முற்றுகையிட்ட பெரியரியாக்கங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News January 23, 2025

மின் பேருந்து சேவை ஆட்டோ டிரைவர்களை பாதிக்குமா?

image

சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் மினி பேருந்துகளை இயக்கப்பட உள்ளன. ஏற்கனேவே, பைக் டாக்சி ஓட்டுநர்களால் ஓட்டுநர்களுக்கு சவாரி கிடைப்பதில்லை என்றும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். அண்மையில் பைக் டாக்சியை நிறுத்த வேண்டும் என்றும் கூட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது இந்த மின் பேருந்து சேவை அறிவிப்பு ஆட்டோ ஓட்டுநர்களை மேலும் கவலை அடைய வைத்துள்ளது.

error: Content is protected !!