India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலை உணவு திட்டத்திற்கான உணவை சமைத்து கொடுக்கும் பணிகளை அவுட்சோர்சிங் செய்ய மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. வடசென்னையில் 9,956, மத்திய சென்னையில் 13,052, தென் சென்னையில் 9,583 மாணவர்கள் பயன்பெறுவர். தூய்மை, மிகவும் பாதுகாப்பான முறையில் உணவை கொண்டு செல்லுதல், போதிய அளவில் உணவு, சரியான நேரத்தில் விநியோகம், தரமான உணவு போன்றவற்றை உறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.14 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
356 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கான உணவை சமைத்து கொடுக்கும் பணிகளை அவுட்சோர்சிங் செய்ய முடிவெடுத்துள்ளது. தரம் குறைந்த உணவு, சமையலறையில் தூய்மையற்ற சூழல் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 32,591 தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். இதையொட்டி வடக்கு, மத்திய, தெற்கு சென்னை பகுதிகளுக்கு 3 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
சென்னையில் இன்று (27.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேரை பாலியல் வன்கொடுமை 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஜன.24ஆம் தேதி மாயமான நிலையில் போலீசார் தேடி வந்தனர். செல்போன் டவர் மூலம் வீணஸ் நகருக்கு நேரில் சென்று பார்த்த போலீசார் மாயமான சிறுமியுடன், மேலும் 2 சிறுமிகள் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து, சிறுவன் உட்பட 3 பேர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லிவாக்கம்-பெரம்பூர் இடையே 4ஆவது ரயில் முனையம் அமையும் என பேசப்பட்டு வந்த நிலையில், இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அரக்கோணம் மார்க்கத்தில், ரயில்கள் பெரம்பூர் கடந்து செண்ட்ரல் வருவதற்கு மிகவும் தாமதமாகிறது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைக்கின்றனர். இந்நிலையில், இந்த 4ஆவது ரயில் முனையம், பயணிகளுக்கு மிகவும் வசதியாக அமையும்.
சென்னை மாநகராட்சி சார்பில் இன்று மாலை 4:30 முதல் 8:30 மணி வரை சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. ஆலந்தூர், அயனாவரம், மாதவரம், மதுரவாயல், கொண்டித்தோப்பு, புழல், சைதாப்பேட்டை, சஞ்சீவராயன்பேட்டை, அடையாறு, சாந்தோம், செம்பியம், ஷெனாய் நகர் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொண்டு மக்கள் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரிக்கு எதிராக போராடிய மாணவர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அறக்கட்டளையின் கீழ் உள்ள 6 கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். அறக்கட்டளையானது கல்லூரி முடிவுகளிலோ, கல்வி சார்ந்த காரியங்களில் தலையிடக்கூடாது என தெரிவிக்கின்றனர்.
சென்னையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதிய ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் 1.8 கிமீ-க்கு ரூ.50, கூடுதலான ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.18, காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50, இரவு நேரத்தில் (இரவு 11 முதல் அதிகாலை 5) பகல் நேர கட்டணத்தில் 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. காவல் ஆணையருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு காவல் துறை பொறுப்பாகாது என தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.49க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.90.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.