India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். பிப்.3ஆம் தேதிக்கு மேல் <
துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வருகையை முன்னிட்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாளை (ஜன.31) மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வளாகங்களும் விமான நிலையம் முதல் ஈ.சி.ஆர்., வரை உள்ள சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று பாதை வகுக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் வருந்த வேண்டாம்.
முட்டுக்காட்டில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், காரில் கொடி பொருத்திய நபர் திமுக பிரமுகர் இல்லை எனவும், மோசடி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு காரில் திமுக கொடியுடன் வலம் வந்துள்ளார் எனவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
தந்தை, மகள் இருவரும் இறந்த அதிர்ச்சியில் செய்வதறியாமல் எபினேசர் திகைத்துபோய், வீட்டில் ஏ.சி.யை ஆன் செய்துவிட்டு கதவை பூட்டிவிட்டு எபினேசர் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். பிறகு தனது மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தி வந்துள்ளார். ஏ.சி. ஆன் பண்ணியே இருந்ததால், இறந்த இருவரது உடல்களும் அழுகுவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று, சிந்தியாவின் தந்தை சாமுவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். அந்த நேரத்தில் வெளிநாடு செல்வது பற்றி பேசியதால் எபினேசர் – சிந்தியா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சாமுவேல் சடலத்தை வைத்துக்கொண்டு இருவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த எபினேசர், சிந்தியாவை தாக்கி வேகமாக கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், சிந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேலுரைச் சேர்ந்தவர்கள் சிந்தியா மற்றும் அவரது தந்தை சாமுவேல். சிந்தியாவுக்கு, திருமணமாகாத எபினேசர் என்பவர் உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தந்தை சாமுவேல் டயாலிசிஸ் நோயாளி என்பதால், சென்னைக்கு அடிக்கடி வருவதுண்டு. இதனால், சிந்தியாவுக்கும், எபினேசருக்கும் நெருக்கம் அதிகமானது. அடிக்கடி சென்னை வந்து செல்ல சிரமமானதால், கடந்தாண்டு செப்., மாதம் இருவரும் சென்னையில் வீடு எடுத்து தங்கினர்.
திருமுல்லைவாயல் பகுதியில் தந்தை, மகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமியோபதி மருத்துவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டியிருந்த வீட்டுக்குள் 4 மாதங்களாக கிடந்த தந்தை சாமுவேல், மகள் விந்தியா உடல்களை போலீசார் கைப்பற்றினர். விந்தியாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஓமியோபதி மருத்துவர் எபிநேசரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில், காது கேளாதோர் – பார்வையற்றோரின் 3-வது தேசிய மாநாடு நாளை (ஜன.31) நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்க குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வருகிறார். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (30.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் OLA, UBER மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஓட்டுநர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஓட்டுநர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை போக்குவரத்துத்துறை உயர்த்த வேண்டும், பேச்சுவார்த்தை நடத்தவில்லையென்றால், பிப்.1ஆம் தேதி முதல் ஓட்டுநர் சங்கம் அறிவித்த கட்டணம் வசூல் செய்யப்படும் என ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.