Chennai

News February 1, 2025

கோளாறு காரணமாக மெட்ரோ டிக்கெட் பெறுவதில் சிக்கல்

image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் வாட்ஸ்அப் செயலி மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெறமுடியவில்லை. எனவே, பயணிகள் அனைவரும் CMRL மொபைல் ஆப், Paytm, PhonePe, சிங்கார சென்னை கார்டு, CMRL டிராவல் கார்டுகள் போன்ற மற்ற வழிகள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ கவுண்டர்களிலும் டிக்கெட்டு பெற்று கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 1, 2025

ஆம்னி பேருந்து விபத்து: 15 பேர் காயம்

image

சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, நேற்று (ஜன.31) நள்ளிரவில் மணப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில், 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பேருந்தின் உள்ளே இருந்தவர்களை பத்திரமாக மீட்க உதவினர்.

News February 1, 2025

கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி

image

கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி விமானப்படை பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த ஆத்விக் என்ற சிறுவன் நேற்றிரவு வீட்டருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக கோல் போஸ்ட் சிறுவன் மீது விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சுயநினைவின்றி உயிரிழந்தான். குடும்பத்தார் கதறி அழுது வருகின்றனர்.

News February 1, 2025

1 லட்சத்தில் 13 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு

image

சென்னையில் 1 லட்சத்தில் 13 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு, 2022இல் கண்டறியப்பட்டுள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் இந்த புற்றுநோய் தரவு சேகரிக்கப்பட்டது. 2022ம் ஆண்டில், புதிதாக, 241 குழந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானது தெரிய வந்தது. அதில், 139 ஆண் குழந்தைகள், 102 பெண் குழந்தைகள். இவர்களில், ரத்தம் சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்.

News January 31, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்..

image

சென்னையில் இன்று (31.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 31, 2025

நேரில் ஆஜரான தமிழக உள்துறை செயலாளர்

image

சென்னை உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜரானார். குற்றப்பத்திரிகைகள் தாமதம் தொடர்பாக உள்துறை செயலாளர் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும், மீறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 31, 2025

நித்தியானந்தா வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

image

மடங்களை நிர்வகிக்க, தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், நித்தியானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார் எனத் தெரிவித்தார். 

News January 31, 2025

அண்ணாவின் 56ஆவது நினைவுநாள் பேரணி

image

அண்ணாவின் 56ஆவது நினைவுநாளினையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரும் பிப்.3ஆம் தேதி காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து, வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News January 31, 2025

குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் 9 பேர் கைது

image

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான தனுஷ் (24) என்பவருக்கு அவரது ஏரியாவை சேர்ந்த இளைஞர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜன.30) அந்த கும்பல் தனுஷை ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளது. முன்பகை காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் 9 பேர் கைதாகினர்.

News January 31, 2025

ஏசி வெடித்ததில் பெண் உயிரிழப்பு

image

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள வீட்டில், நள்ளிரவில் ஏசி வெடித்ததில் பேராசியர் தனலஷ்மி (44) என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!