India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி திருக்கோயிலில் வீற்றிருக்கும் அஷ்டலட்சுமிகளையும் வெள்ளிக்கிழமையன்று நெய் விளக்கேற்றி வணங்கினால், தரித்திரம் நீங்கி வாழ்வில் செல்வ கடாக்ஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது, கடற்கரையோரம் அமைந்திருக்கும் இந்தியாவின் சில கோவில்களில் இதுவும் ஒன்று, அஷ்டலட்சுமிகளுக்கும் புடவை சாத்துதல் இங்கு முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது.
புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 712 குடியிருப்பு தாரர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.19) வழங்கி சிறப்பித்தார். பின்னர், வீடுகளை பெற்ற மக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. அப்போது, முதல்வர் ஸ்டாலின் பிரியாணியை தனது கையால் பரிமாறி அழகு பார்த்தார். அனைவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
சென்னையில், இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சையளிக்க வேண்டும். தீவிர பாதிப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.
பிரபல இந்தி திரைப்பட நடிகரான அமீர்கானின் தாயார் ஜீனத், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.19) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகவே, ஜீனத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Way2News App-ஐ தொடர்ந்து பாருங்கள்.
கடந்த சில நாட்களாக சென்னையில் பாலியல் வன்கொடுமை, கொலை என பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமையில் தொடங்கி தற்போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பெண் போலீசுக்குக்கே பாலியல் அத்துமீறல் நடக்கும் அளவிற்கு மாறியுள்ளது. மறுபக்கம், பட்டப்பகலில் மர்ம கும்பலால் இருவர் வெட்டி கொலை செய்யப்படுகின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உங்கள் கருத்து?
சென்னை மண்ணடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சென்னமல்லீசுவரர் கோவிலில் மூலசாதனத்தில் சிவலிங்க வடிவில் மூலவர் எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதர், சரஸ்வதி தேவி, பால விநாயகர், முருகர், நடராசர், சனீஸ்வரர் ஆகியோருக்கு இங்கு அர்ச்சனை நடைபெறும். இங்கு வழிபட்டால் செல்வம் கொழிக்கும், நஷ்டம் நீங்கும், துக்கம் தூள் தூளாகும், கணவன் மனைவி உறவு மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 1,000 கிலோ வரையிலான கட்டிடக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே இலவசமாக எடுத்துச் செல்லும் என்றும், ஒரு டன் முதல் 20 டன் வரையிலான கழிவுகளை எடுத்துச் செல்ல 2,500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள், அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் வரும் பிப்.28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வியாபாரிகள் அனைவரும் தவறாமல் பெற்றுக் கொள்ளுங்கள். பிப்.28ஆம் தேதிக்குள், பெற்றுக் கொள்ளாத சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகப்படியான சளி காரணமாக, அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து இன்று (பிப்.17) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள திருவொற்றியூர் கடற்கரையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. வடசென்னையில் பல சுற்றுலா தளங்களை உருவாக்கும் எண்ணத்தில் மாற்றங்களை செய்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக திருவொற்றியூர் கடற்கரை மாற்றம் செய்யப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் கைப்பந்து மைதானங்கள், வாக்கிங் டிராக்குகள், ஜிம்கள், புதிய கடற்கரைகள் கொண்டு வரப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.