Chennai

News February 25, 2025

சிருமிக்கு பாலியல் தொல்லை – பூசாரி கைது

image

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கணவர் பிரிந்ததால் தாயுடன் 7 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில், சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நோட்டமிட்ட கோவில் பூசாரியான சேகர் (56), சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று டி.வி, பொம்மைகளை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மக்கள் அவரை அடித்து, உதைத்து போலீசிடம் ஒப்படைத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

News February 24, 2025

7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை – பூசாரி கைது

image

சென்னை புளியந்தோப்பு பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி சேகர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோவில் பூசாரியை சரமாரியாக தாக்கி புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் சேகரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 24, 2025

தபால் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு

image

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் ஹிந்தி எழுத்துக்களை அழித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்பு மை வைத்து அழித்தனர்.

News February 24, 2025

சென்னை: முதல்வர் மருந்தகங்கள் செயல்படும் இடங்கள் 2/2

image

லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்; காமராஜபுரம், பாண்டித்துரை தெரு, வேளச்சேரி; வீரராகவர் தெரு, திருவல்லிக்கேணி; மாநகராட்சி கட்டிடம், சின்னமலை வேளச்சேரி மெயின் ரோடு; நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராஜ நகர்; சுந்தரம் தெரு, ராஜா அண்ணாமலைபுரம்; லஸ்.சர்ச் ரோடு, மயிலாப்பூர்; செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் முதல்வர் மருந்தகம் செயல்படும்.

News February 24, 2025

சென்னை: முதல்வர் மருந்தகங்கள் செயல்படும் இடங்கள் 1/2

image

குன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம்; ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர்; மன்னார் சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு; காந்தி தெரு கே.எம்.நகர், கொடுங்கையூர்; நாட்டுப் பிள்ளையார் கோவில் தெரு, எழு கிணறு; கல்யாணபுரம் தெரு, சூளைமேடு; சாமியார் சாலை, நந்தனம்; கோவிந்தன் தெரு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் முதல்வர் மருந்தகங்கள் அமைந்துள்ளன.

News February 24, 2025

முதல்வர் மருந்தகங்களைத் திறந்த வைத்த முதலமைச்சர்

image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.24) முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை தியாகராயர் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னையில் 33 இடங்கள் உள்பட 1,000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்பட்டன. ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் 20- 90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

News February 24, 2025

தனியார் வங்கியில் வேலை; டிகிரி போதும்

image

சென்னையில் தனியார் வங்கியில் 10 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 18-38 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் ஏதும் தேவையில்லை. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் பிப்.28 ஆம்தேதிக்குள் <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 24, 2025

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் பலி

image

பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியை சேர்ந்த கோபிகிருஷ்ணன்(49) தனது உறவினர்கள் 4 பேருடன் சித்தூரில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்தார். அப்போது திருவள்ளூர் அடுத்த பாண்டூர் சாலையில் எதிரே திருத்தணி நோக்கி வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.

News February 23, 2025

கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 20 ரயில்கள் ரத்து

image

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 20 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி நாளை காலை 9:55 மணி ரயிலும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மாலை 3:00 மணி ரயிலும், கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். இதையடுத்து சென்ட்ரல் – பொன்னேரி தடத்தில் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப் D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த<> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!