India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகர் மின்சார ரயில் மார்ச் 26,27,28 தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. ஆவடி ரயில் பணிமனையில் மார்ச் 26,27,28 தேதிகளில் நள்ளிரவு 12:30 மணி முதல் 3:30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அந்நாளில் சென்ட்ரலில் இருந்து 12:15க்கு ஆவடி செல்லும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <
பாலிடெக்னீக் கல்லூரி மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் மறுத்ததோடு, அந்த மாணவிக்கு ‘டீசி’ கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு SFI மாணவர் சங்கத்தினர் நேற்று (மார்.25) கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் ஆண் நண்பரைச் சந்திப்பதற்காக சென்றார். நீண்ட நேரத்துக்கு பிறகு ஒரு மாணவி மட்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பி உள்ளார். மற்றொரு மாணவி, ரத்த காயங்களுடன் மறுநாள் கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார். அப்போது, அந்த நண்பர் தனக்கு போதைபொருளை கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.
சென்னையில் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்தனர். கொள்ளையடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் மற்றும் சூரஜ் ஆகியோரை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர். நகைகளை பறிமுதல் செய்வதற்காக தரமணி காவல் நிலையம் அழைத்து செல்லும்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜாபர் சுட முயன்றுள்ளார். அப்போது, தற்காப்புக்காக போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் இன்று மாலை 6 மணியளவில் காலமானார். மனோஜூக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்கள் அனைவரும் சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர்.
சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு (1) துணை ஆணையராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை காவல் ஆணையர் ஹரிகிரண் பிரசாத் மாற்றப்பட்டு, புதிய துணை ஆணையராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெகலீனா ஹைடன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பாடியில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார் ஆகியோர் நேரில் வந்து சிவபெருமானை தரிசனம் செய்துள்ளனர். திருஞானசம்பந்தர் இக்கோயிலை போற்றி தேவாரத்தில் பாடியுள்ளார். இக்கோயிலுக்கு வந்தாலே பாவங்கள், சாபங்கள் நீங்கும் என்று பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை துறைமுகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் சென்றுள்ளார். அங்கு துறைமுக போக்குவரத்து உதவி கண்காணிப்பாளர் சத்ய சீனிவாசன் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில், சத்ய சீனிவாசன் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை சட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.