Chennai

News July 8, 2025

சென்னை சைபர் குற்றப்பிரிவு ரூ.2.96 கோடி மீட்பு

image

சென்னை சைபர் குற்றப்பிரிவு ஜூன் 2025-ல், 146 புகார்களில் ரூ.2.96 கோடி பணத்தை மீட்டு சாதனை புரிந்துள்ளது. இதில் மத்திய மண்டலம் மட்டும் ரூ.2.30 கோடியை மீட்டுள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களிலும் கணிசமான மீட்பு நடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரை மொத்தம் ரூ.15.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 8, 2025

திருநங்கையர், திருநம்பியருக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பற்ற திருநங்கை மற்றும் திருநம்பியருக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முகாமில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. இது வேலை தேடும் திருநங்கையர், திருநம்பியருக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.

News July 7, 2025

வீட்டுமனை விளம்பரத்திற்கு கட்டுப்பாடுகள்

image

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை குழுமம் எச்சரித்துள்ளது. அதேபோல, 100க்கும் மேற்பட்ட வசதிகள் என்றோ, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றோ கவர்ச்சி வாசகங்களுடன் விளம்பரம் செய்யவும் தடை விதித்துள்ளது.

News July 7, 2025

சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிய அரசு சேவை முகாம்கள்

image

சென்னை மாநகராட்சியில் ஜூலை 15 முதல் ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் தொடங்குகின்றன. தன்னார்வலர்கள் திங்கள்கிழமை முதல் வீடு வீடாக விண்ணப்பப் படிவங்களை வழங்குவார்கள். இம்முகாம்களில் மருத்துவ சேவைகளும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சேவைகள் மற்றும் ஆவண விவரங்கள் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

News July 7, 2025

சென்னை விமான நிலையத்தில் வேலை

image

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 பணியிடங்கள் உள்ளன. +2, டிகிரி படித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ரூ.21,500 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் இந்த <>லிங்கில் <<>>உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் கொடுக்க வேண்டும். உடனே காப்பீடு அட்டை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

image

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, சென்னை மாவட்ட அதிகாரிகள் (7373008060, 7373004541, 7373005408) அல்லது உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16974106>>தொடர்ச்சி<<>>

News July 7, 2025

மது போதையில் பாலியல் பலாத்காரம்

image

சென்னையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழி, 2 ஆண் நண்பர்களுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் மது அருந்தியபோது, மது போதையால் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணிடம் ஆண் நண்பர்களில் ஒருவர் இவ்வாறு செய்துள்ளார். கண் விழித்து பார்த்தபோது அப்பெண் ஆடை இல்லாமலும், பிறப்பு உறுப்பில் காயத்துடனும் இருந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தோழி, ஆண் நண்பரை கைது செய்தனர்.

News July 6, 2025

சென்னை பெருநகரில் ஜூலை 21 வரை வாரண்டின்றி கைது

image

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், காவல்துறை அதிகாரிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என சந்தேகப்பட்டால், வாரண்ட் இல்லாமல் கைது செய்ய பிரிவு 41-ன் கீழ் அதிகாரம் வழங்கியுள்ளார். இந்த உத்தரவு ஜூலை 6 இரவு 12 மணி முதல் ஜூலை 21 இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

வெளிநாட்டு ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம்

image

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூர் கோடாலி தைலம் இறக்குமதி வழக்கில், உரிமம் இல்லாததால் சுங்கத்துறை தடை விதித்தது. இறக்குமதியாளர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருந்து இறக்குமதியில் பொதுநலனே முக்கியம் எனவும் உரிய உரிமம் பெற்ற பின்னரே சரக்குகளை விடுவிக்க முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

error: Content is protected !!