Chennai

News March 21, 2025

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை(22-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News March 21, 2025

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்

image

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (மார்ச்.22) இயங்கும் என பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 21, 2025

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

image

பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் ‘இளஞ் சிவப்பு ஆட்டோக்கள்’ (பிங்க் ஆட்டோக்கள்) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு கடந்த 8ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கினார். 2ஆம் கட்டமாக தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற சென்னையைச் சேர்ந்த பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம்

image

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை (மார்ச் 22) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர், அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதல்வர்கள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் <>லிங்க்<<>>

News March 21, 2025

பிரபல ரவுடி சுட்டிபிடிக்கப்பட்டார்

image

சென்னையில் பிரபல ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் மகாராஜா என்ற ரவுடி மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்யும்போது, அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரை சுட்டுப்பிடித்தனர்.

News March 21, 2025

சென்னையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வரும் 26.03.2025- 28.03.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, தொழில் முனைவோர் மேம்பாடு & புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 8668108141 /8668102600 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

News March 20, 2025

ராயப்பேட்டை ஹாஸ்பிடலில் வெப்ப வாதம் தனி வார்டு தயார்

image

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், வெப்பவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

தீப்பொறி கிளம்பியதால் மெட்ரோ சோதனை ஓட்டம் ரத்து

image

சென்னை போரூர் – பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஓடுதளத்தில் வயர் அறுந்து விழுந்து தீப்பொறி கிளம்பியதால் சோதனை ஓட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு நடைபெறுவது வழக்கம் எனவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 20, 2025

சென்னை திரிசூலத்தில் சோழர் கால கோயில்

image

சென்னை திரிசூலத்தில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து திரிசூலநாதர் திருக்கோயில்கோயில் உள்ளது. இக்கோயில் தேவாரத்தில் வைப்புத்தலமாக பாடப்பட்டுள்ளது. மலைகள் சூழ்ந்த பகுதியில் அருள்பாலிப்பதால் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தவிர பிணி, திருமணத்தடை நீங்க இங்கு வழிபடுகிரார்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!