India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1. கபாலீஸ்வரர் கோயில்- திருமயிலை, 2. மருந்தீஸ்வரர் கோயில்- திருவான்மியூர், 3. திருவல்லீஸ்வரர் கோயில்- திருவலிதாயம், 4.மாசிலாமணீஸ்வரர் கோயில்- திருமுல்லைவாயில், 5. தியாகராஜ சுவாமி கோயில்- திருவொற்றியூர், 6 .வேதபுரீஸ்வரர் கோயில்- திருவேற்காடு, 7. தேனுபுரீஸ்வரர் கோயில்- மாதம்பாக்கம். ஷேர் பண்ணுங்க.
சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 76.21% நீர் இருப்பு உள்ளதால், இந்த கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகருக்கு மாதம் தோறும் 1 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 8 டிஎம்சி குடிநீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18வது சீசனின் ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது. இதில் சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை காண்பித்து, போட்டிக்கு 3 மணி நேரம் முன்பும், போட்டி முடிந்த 3 மணி நேரம் வரையும் இலவசமாக பயணிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. (மார்ச்.24) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.
மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <
தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா, போதை ஊசி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்வதும் அதை பயன்படுத்துவதும் அதிக அளவில் இளைஞர்களே ஈடுபட்டுவருகின்றனர். தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை.
சென்னையை அடுத்து எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஓட்டுனர் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14). கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வு நெருங்கும் நிலையில் படித்து வந்த இவர் இவர் கடந்த சனிக்கிழமை ஈர கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
இன்றைய இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விவரங்களை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் எனவும் இரவு முழுவதும் காவல் அதிகாரிகள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் பிரசித்தி பெற்ற அஷ்டலட்சுமி கோவில் உள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள் பாவிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியும் என ஒவ்வொரு லட்சிமிகும் தனி சிறப்பு உண்டு. விசிட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.