India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் தினந்தோறும் மாலை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.அதேபோல், இன்றும் (நவ.20) சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வரும் நவ.22 தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவுக்கான (CIBF-2025) அறிவிப்பு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. “தமிழை உலகுக்கும், உலகைத் தமிழுக்கும் எனும் உயரிய இலக்கோடு, 2025ஆம் ஆண்டுக்கான சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை (2 3 நாட்கள்) சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்படவுள்ளது” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க
சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் 23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் நாளை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாதாந்திர குலுக்கலில் தேர்வான பயணி சேதுராமன் என்பவருக்கு ரூ.10,000 பரிசுத்தொகையை நேற்று போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது. முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டை எடுத்துச் செல்லுங்கள். தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.
பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை, வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. தமிழர்கள் பெருமளவு வசிக்கும் பினாங்கிற்கு, விமான சேவை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விமான சேவை தொடங்கப்படுகிறது.
சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவிலிருந்து மலர் செடிகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுகிறது. ஊட்டியில் தாவரவியல் பூங்காவிலும் இதற்காக மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரு லட்சம் மலர் தொட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக தற்போது நடைபெறுகிறது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும். கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100 மற்றும் அழைத்து வரும் நபர்களுக்கு ரூ.200 வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.