Chennai

News February 2, 2026

சென்னையில் கரண்ட் கட்

image

சென்னையில் நாளை (பிப்.03) காலை 9 – 2 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி கன்னிகாபுரம், அகஸ்தியர் தெரு, பாலாஜி அவென்யூ, வண்டிக்காரன் தெரு மற்றும் ஐடி காரிடார் டைடல் பார்க், தரமணி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் ஃபேஸ்-1, 100 அடி சாலை, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம், கந்தன்சாவடியில் மின் தடை செய்யப்படும்.

News February 2, 2026

பெசன்ட் நகர் கடற்கரையில் மிளிர்ந்த ‘with Love’

image

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் with love படக் குழுவினர் படத்தை பிரபலப்படுத்தும் வகையிலும் அனைவரும் கவரும் வகையிலும் புதிய ட்ரென்டிங்கான ஆகாய ட்ரோன் ஷோ ஒன்றை நடத்தினர். மேலும் விடுமுறை நாளான நேற்று பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்த மக்கள் வானில் ‘with Love’ என்ற வடிவில் பறந்த ட்ரோன்கள் கண்டு வியந்தனர்.

News February 2, 2026

சென்னை அருகே வீட்டிற்குள் புகுந்த பேருந்து

image

திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து கிருஷ்ணசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை வளைவில் திரும்ப முயன்று. அப்போது எதிரே கரும்பு ஏற்றி கொண்டு டிராக்டர் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். மேடான சாலை என்பதால் பின்னோக்கி வந்த பேருந்து முரளி என்பவரின் வீட்டிற்குள் புகுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

News February 1, 2026

சென்னை: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

சென்னை: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு!

image

சென்னை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 1, 2026

சென்னை பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

சென்னையில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

BREAKING: சென்னைக்கு அதிவேக ரயில்

image

2026-27 மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவைகள் தொடங்கப்படும் என அறிவித்தார். இதில், சென்னை–பெங்களூரு மற்றும் சென்னை–ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய பாதைகளில் அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தென் மாநிலப் பயணிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகும்.

News February 1, 2026

சென்னை: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

சென்னை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

சென்னையில் கொடிக்கம்பம் நட இனி அனுமதி கட்டாயம்

image

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் பொது இடங்களில் தற்காலிகமாக அரசியல் அல்லது மத விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாகப் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.

News February 1, 2026

சென்னை: தாயைக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை

image

சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ஜுபாவதி (70). தனது 40 வயது மகன் பிரபுவுடன் வசித்து வந்தார். நேற்று நீண்ட நேரம் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையறையில் பிரபு தூக்கில் தொங்கிய நிலையிலும், ஜூபாவதி படுக்கையில் சடலமாகவும் கிடந்தனர். செம்மஞ்சேரி போலீசாரின் விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் தாயைக் கொன்றுவிட்டு பிரபு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

error: Content is protected !!