India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 2023 ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு மற்றும் ஆளுநர் ரவியை தரக்குறைவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நேற்று மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

▶மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
▶அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
▶ராயப்பேட்டை பால்னீஸ்வரர் கோயில்
▶திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
▶சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
▶தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
▶திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
▶நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
▶ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
▶திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
▶பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில். ஷே பண்ணுங்க

சென்னையில் இன்று 40 நிமிடங்களுக்கு மேல் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை அருகில் ரயில் மின் வழித்தட வயரில், கேபிள் வயர் அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவை திடீர் என பாதிக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 40 நிமிடங்களுக்கு ரயில் போக்குவரத்து சீரானதால் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறினர்.

சென்னை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வில்லிவாக்கம், இராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், கடந்த பிப்.10ஆம் தேதி பாபா நகர் ஜிம்மில் பயிற்சி முடித்து வீடு திரும்பும் வழியில், இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர், முகவரி கேட்பது போல் நடித்து தவறாக நடந்ததாக புகார் அளித்தார். இதுகுறித்து V-4 இராஜமங்கலம் போலீசார், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (72) என்பவரை நேற்று(பிப்.13) கைது செய்தனர்.

உலகம் முழுவதும் இன்று(பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகையால், மெரினா, கிண்டி பூங்கா, திரையரங்குகள் போன்ற இடங்களில் காதலர்கள் கூடுவர் இந்நிலையில், காதலர் தினத்தில் வழக்கமாக போராட்டங்கள் செய்யும் இந்து அமைப்புகள், இயக்கங்கள், காதலர்களை அச்சுறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பொது இடங்களில் எல்லை மீறும் ஜோடிகள் மீதும் போலீஸ் நடவடிக்கை பாயும்.

சென்னையை அடுத்த பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(44). இவரது மனைவி கவிதா(42). இருவரும் ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரிக்கரை அருகே சென்ற போது, சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார், இவர்களின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி, படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை மாநகராட்சி சார்பில், திரு.வி.க.நகர் மண்டலத்தின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் இன்று 14.02.2026 அன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.