India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை பூக்கடை ரெட்டி ராம் தெருவில் ஜன.25 ஆம் தேதி கடை ஷட்டர் பூட்டை உடைத்து, ரமேஷ்குமார் ஜெயின் (55) கடையில் ₹1,30,000 மற்றும் எதிர்கடையில் ₹65,000 திருடப்பட்டதாக C-1 பூக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பதுங்கியிருந்த ஈஸ்வர் (42), கன்பத் சிங் (38) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

சென்னை பிரிவில் புதிதாக கட்டப்பட்ட வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைகளை தில்லி ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கார்க் மார்ச் 5ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதே நாள் மதியம் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெறும். மேலும், மார்ச் 10 முதல் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் புதிய கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாய (NGT) தடை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், 3 வாரங்களில் தமிழக அரசு மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பாய உத்தரவால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு அருகில் அமைந்துள்ளது மத்திய கைலாஷ் என்று அழைக்கப்படும் ஆனந்த விநாயகர் கோயில். இக்கோவிலில், “ஆத்யாந்த பிரபு” என்ற தனித்துவமான சிலை உள்ளது. இந்த சிலை வலதுபுறம் 50% விநாயகர் சிலையாகவும், 50% அனுமன் சிலையாகவும் உள்ளது. நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபட இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள். விநாயகர் மீது நேரடியாக கற்பூரம் ஏற்றி வைக்க இங்கு அனுமதிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ➡️வகை: மத்திய அரசு வேலை, ➡️ பணியிடங்கள்: 252, ➡️ வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், ➡️ சம்பளம்: ரூ.20,000, ➡️ தகுதி: 12ஆம் வகுப்பு, ➡️ கடைசி தேதி: 10.03.2026, ➡️ விண்ணப்பிக்க: <

கூகுளில் <

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், கே.கே.நகர் கோட்டங்களில் இன்று (மார்ச் 3) நடைபெறும் குறைதீர் கூட்டங்களில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின் இணைப்பு மற்றும் குறைகள் தொடர்பான கோரிக்கை, குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் வருகிற மார்ச் 5ஆம் தேதி பாதுகாப்பு கமிஷனர் சோதனை மேற்கொள்கிறார். வருகிற மார்ச் 7ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் 10ஆவது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களுக்கு ரயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.