India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பார்வதி தேவி சிவனிடம் திருநீறு பற்றி விளக்க கேட்க, சிவன் விளக்கமளித்தார். அங்கு மயில் ஆடுவதை பார்க்க, சிவன், ‘நீ மயில் உருப்பெற்றிடுவாய்’ என பார்வதிக்கு சாபமிட்டார். இங்கு புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை தேவி வழிபட்டதால் சாபம் நீங்கியது. இது மயிலை என்றானது. இங்கு ஈசனை வழிபடுவோருக்கு மன நிம்மதி கிடைப்பதுடன், உடல் சார்ந்த எந்த நோயாக இருந்தாலும் இங்கு வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. ஷேர்!

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை (ஐசிஎஃப்) வளாகத்தில் மார்ச் 12 முதல் 14 வரை மூன்று நாட்கள் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 125 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ரயில் பெட்டி தயாரிப்பு தொழில்நுட்பம், புதிய மாதிரிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1) சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044–25342441, 2)தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, 3) Toll Free 1800 4252 441, 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில், மின் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. திறந்த நிலை மின் பெட்டிக்கு அருகில், தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், அம்மா உணவகம் மற்றும் ATM-கள் உள்ளன. இச்சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் & இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அசம்பாவிதம் நிகழும் முன், மின் பெட்டியை மூட கோரிக்கை எழுந்துள்ளது.

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.

சென்னை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

சென்னை மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நாளை 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தண்டவாளத்தின் உறுதித்தன்மை, சிக்னல் அமைப்பு, மின்சார வழித்தடம், ரயில் நிலையத்தின் தரம் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 10ம் தேதி முதல் பறக்கும் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஜே.கருணாநிதி வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுவே இங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதற்குச் சான்று. அதிமுக இந்த முறை தனது பலமான வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், வணிக வளாகங்களில் நிலவும் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை ஆகியவை மக்களின் குறையாக உள்ள நிலையில், இந்த முறை வெற்றி யாருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

சென்னை புளியந்தோப்பில் டெலிவரி ஊழியராக வேலை செய்யும் தினேஷ் (26) மீது முன்விரோதம் காரணமாக நண்பர் கடப்பா செந்தில் உள்ளிட்ட 3 பேர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். காயமடைந்த தினேஷ் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புளியந்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜமாணிக்கம் (28), செந்தில் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.