India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை, ராயபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 7ஆம் தேதி பள்ளி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்றார். ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள கடையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில், பி.வி கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (54) என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மதுரவாயலில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வருகிற 25 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க.

சென்னை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய தாழ்த்தள மின்சார ‘குளிர்சாதன ப்ரீமியம் பேருந்து’ சேவையை இன்று(மார்ச் 11) தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சிவசங்கர்., தண்டையார்பேட்டை பேருந்து பணிமனையில் புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை: பெரும்பாக்கம், சேகரன் நகரை சேர்ந்தவர் புனீஷ் (38). இவரது மனைவி லாவண்யா (35). இவர்களின் மகள் இனியா (13), பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 10) காலை பைக்கில் மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி பைக் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ’சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி தவறான நபர்கள் வதந்தியை பரப்பி வருகின்றனர். இது அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிரான மற்றும் தவறான செயல். இது போன்ற தவறான தகவல் மற்றும் கடிதங்கள் அனுப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராக பணியாற்றிய ஆர்.என். ரவி, மேற்கு வங்காளம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மக்கள் மாளிகையில் இருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மாண்புமிகு ஆளுநரை வழியனுப்பினர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று(மார்ச் 11) துபாய், அபுதாபி செல்லவிருந்த 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. காலை 8.05 மணிக்கு டில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. பைலட் வராததால் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் SG.2923 (சென்–கொச்சி), SG.640 (சென்–மக்கா) ரத்து செய்யப்பட்டன.
Sorry, no posts matched your criteria.