Chennai

News March 12, 2026

சென்னையில் சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டம்!

image

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக, கோயம்பேட்டை இணைக்கும் பல்வேறு கிளைச் சாலைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பாடி மேம்பாலம் முதல் திருநின்றவூர் வரையிலான சாலையை வலுப்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) பரிந்துரை செய்துள்ளது.

News March 12, 2026

சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சென்னை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

சென்னையில் 215 ஹோட்டல்கள் மூடல்!

image

வணிக LPG சிலிண்டர் தட்டுப்பாட்டால், சென்னையில் 215 சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளனர். பெரிய அளவிலான உணவகங்கள் விறகு, மின்சார அடுப்புகளுக்கு மாறியுள்ளன. கியாஸ் வருகையைப் பொறுத்து அவ்வப்போது ஹோட்டல்களை திறப்பதும், உணவு வகைகளைக் கணிசமாகக் குறைத்தும் விற்பனையை மேற்கொள்கின்றனர்.

News March 12, 2026

மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திருப்பம்!

image

திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் தீவிர விசாரணையில் மன அழுத்தத்தில் அப்படி புகார் அளித்ததாக அம்மாணவி கூறியுள்ளார். மேலும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 12, 2026

சென்னை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

சென்னை: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

18ஆம் தேதிக்குள் மாடுகளுக்கு உரிமம் பெற உத்தரவு

image

சென்னையில் இதுவரையில் 750 மாடுகளுக்கு மட்டுமே உரிமம் பெற்று மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதிக்குள் மாடுகளுக்கு உரிமம் பெற்றிருக்க வேண்டுமென ஏற்கனவே மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மாடுகளுக்கு உரிமம் பெறவும், மைக்ரோசிப் பொருத்தவும் ஆர்வம் காட்டத நிலை உள்ளது. 18ம் தேதிக்குள் உரிமம் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News March 12, 2026

தி.நகரில் தட்டித் தூக்கிய அதிமுக!

image

சென்னை தி.நகர் பகுதியில் தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.சத்யா முன்னிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அவர்களை வரவேற்றனர். மேலும், 2026 தேர்தலில் செயலாற்ற வேண்டியது குறித்து சத்யா அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

News March 12, 2026

சென்னையில் ரூ.5000 வேண்டுமா?

image

சென்னை மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News March 12, 2026

சென்னையில் நடிகை மீது நடிகர் பரபரப்பு புகார்!

image

பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை நடிகை மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பி, தன்னை மன உளைச்சலுக்கு உண்டாக்கி, பணம் பறிக்க முயல்வதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!