Chengalpattu

News December 26, 2024

செயலி மூலம் கடன் வாங்குவதை தவிர்க்க போலீசார் அறிவிப்பு

image

குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என பொய்யாக விளம்பரப்படுத்தும் மூன்றாம் ரக செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தங்களின் ஆதார் மற்றும் ஆவணங்களை தவறாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அண்மையில் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்

News December 26, 2024

பயண நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பீர்

image

சாலை பயணம் மேற்கொள்வோர்களுக்கு, நாளுக்கு நாள் சாலை பயணம் கடினமாகி வருகிறது. விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. பொதுமக்களின் அஜாக்கிரதை காரணமாக விபத்துக்கள் நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பயணம் செய்யும் நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை தவிரத்து பாதுகாப்பான பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வீர் என காவல்துறை சார்பில் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News December 26, 2024

சுனாமி: 20ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று

image

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஷேர் பண்ணுங்க

News December 26, 2024

மதுராந்தகம் அருகே கார்கள் விபத்து: 3 பேர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த புத்தகத்துறை பகுதியில் கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நெற்குன்றத்தைச் சேர்ந்த கணபதி, பாலா (10), ஹேமா (12) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News December 26, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம், பெருங்களத்தூர், அனகாபுத்தூர், பம்மல், சேலையூர், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News December 25, 2024

செங்கல்பட்டு: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத் தளம் ‘டி’ பிளாக்கில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் இந்த டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 27.12.24 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

News December 25, 2024

செங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் உட்பட நால்வருக்கு சிறை 

image

அரசு பணியில் இருந்தபோது அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுப்புற சூழல் பொறியாளர் உமயகுஞ்சரம், அவரது மனைவி, 57, தந்தை ராமலிங்கம் 87, தாய் அரிவானந்தகோமதி 85, ஆகியோருக்கு, செங்கல்பட்டு நீதிமன்றம், நேற்று தண்டனை வழங்கியது. இதில் பொறியாளர் உமயகுஞ்சரம், அவரது மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறையும், தந்தை ராமலிங்கம்,தாய் அரிவானந்தகோமதிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

News December 25, 2024

செங்கல்பட்டு அருகே சிறுவன் நீரில் மூழ்கி மரணம் 

image

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம், கேளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல்.இவரது மகன் சாய் தர்ஷன், (8); அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். வீட்டில் இருந்த சிறுவன், நேற்று முன்தினம் இரவு காணவில்லை. நேற்று, அப்பகுதியில் உள்ள கேளியம்மன் கோவில் குளத்தில், சிறுவன் இறந்து மிதந்து கிடந்தார்.கேளம்பாக்கம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 24, 2024

குடிபோதையில் பயணம் செய்ய வேண்டாம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து பிரிவு போலீசார், குடிபோதையில் பயணம் செய்ய வேண்டாம். உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்களுக்கான ஒரு குடும்பம் உள்ளது என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு குடித்துவிட்டு வானம் ஓட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News December 24, 2024

தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைக்க கோரிக்கை 

image

பல ஆண்டுகளாக தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யாமல் தாமதப்படுத்தி வருவதால் தெற்கு ரயில்வே மீது பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணிகளுக்காக 2020ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்தது. ஆனால், தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளது. பயணிகளை உடனடியாக துவங்க கோரிக்கை எழுந்துள்ளது. 

error: Content is protected !!