India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என தெரிவிக்கபட்டுள்ளது.
அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான சிவராமன் வீடு திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது. இன்று சிலர் சிவராமன் வீட்டுக்கு சென்று பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சிவராமன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். அதன்பின், வரும் 11ம் தேதி இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5.50க்கு தாம்பரம் வந்தடையும்.
செங்கல்பட்டு அருகே மாமண்டூர் கிராமத்தை சார்ந்த வினோத் (38) இவரது மனைவி தேவி ( 30) இவர்கள் தங்களுடைய மூணு மாத குழந்தையை செங்கல்பட்டு சேர்ந்த ஜார்ஜ் தேவதாஸ் ( 45 ) என்பவருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து குழந்தையை வாங்கிய ஜார்ஜ் தேவதாஸை கைது செய்தனர்.
திருவண்ணாமலையைச் சார்ந்த மூன்று மாணவர்கள் பள்ளியில் நடந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் மாணவர்களை கண்டித்துள்ளனர். இதனால், பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட மூன்று பேரும் அங்கிருந்து பேருந்து மூலம் சென்னை வந்துள்ளனர். அவ்வாறு வந்த மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் பகுதியில் சுற்றித் திரிந்த போது கூடுவாஞ்சேரி போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் விரைவு ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது என்றாலும் பயணிகளின் வசதிக்காக மாம்பலம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. SHARE IT
வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிறன்று( ஆக.11) இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5.50க்கு தாம்பரம் வந்தடையும்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தை அமைச்சர் அன்பரசன் இன்று துவக்கி வைத்தார். இந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா, நகரமன்ற தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பா.பொன்னையா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில், கோவிலம்பாக்கம், வேங்கைவாசல், மண்ணிவாக்கம் போன்ற ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் அனாமிகா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லுங்கள். இன்று மழை பெய்யுமா?
Sorry, no posts matched your criteria.