Chengalpattu

News September 16, 2024

மாமல்லை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

image

செங்கல்பட்டு, மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பக்தர்கள், நேற்று கடலில் விஜர்சனம் செய்தனர். லாரி, டிராக்டர், வேன் ஆகியவற்றில், மேளதாளத்துடன் வரிசையாக சிலைகள் கொண்டு வரப்பட்டு, கடற்கரையில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு, கடலில் கரைத்தனர். நேற்று ஒரே நாளில் மாமல்லையில் 200 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

News September 16, 2024

வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுக்கலாம் என ஆட்சியர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார். இச்செய்தியை தேவைப்படும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவவும்.

News September 15, 2024

பட்டாசு வெடித்து அரசு பேருந்து கண்ணாடி உடைந்தது

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில், கடந்த 7ஆம் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று காவல்துறை அனுமதியுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. ஊர்வலத்தின்போது வெடித்த பட்டாசு அதிர்வினால், திருக்கழுக்குன்றத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

News September 15, 2024

செய்யூர் எம்.எல்.ஏ. மீது லஞ்சம் கேட்டதாக வழக்கு

image

சித்தாமூர் அடுத்த புத்திரன்கோட்டை – மாம்பாக்கம் இடையே, நபார்டு நிதியில் இருந்து ரூ.3.70 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செய்யூர் எம்.எல்.ஏ. பாபு, புத்திரன்கோட்டை ஊராட்சி தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட சிலர் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக ஒப்பந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News September 15, 2024

தாம்பரத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால்,தாம்பரத்திலிருந்து கூடுதலாக பேருந்து சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் நலம் கருதி இன்று கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News September 15, 2024

செங்கல்பட்டு அருகே 5 பேர் கைது

image

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (35). கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை என தாயார் சரஸ்வதி மேடவாக்கம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் 7ம் தேதி நன்மங்கலம் ஏரிக்கரையில் நண்பர்கள் தமிழரசன், ராஜேஷ், முத்துராஜ், ரஞ்சித்,ராம்குமார் ஆகியோருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட பிரச்சனையில் நண்பர்கள் பாண்டுரங்கனை தாக்கி ஏரியில் வீசி உள்ளனர்.உடல் இன்னும் கிடைக்கவில்லை.5 பேரை போலீசார் கைது செய்தனர்.

News September 15, 2024

தாம்பரத்தில் 65 மின்சார ரயில் சேவை இன்று ரத்து

image

தாம்பரம் ரயில்வே பாதையில் இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. இதனால், இந்த தடத்தில் வழக்கமாக செல்ல வேண்டிய சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான 65 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவை, கடற்கரை – பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்பதால் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

News September 14, 2024

குரூப்-2 தேர்வு: 7,299 பேர் ஆப்சென்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 42 தேர்வு மைங்களில், 21,599 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர். தேர்வு நடைபெறுவதைக் கண்காணிக்க தேர்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். குரூப் 2 தேர்வை எழுத 21,599 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 14,300 மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். எஞ்சிய 7,299 பேர் இத்தேர்வை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2024

நடிகர் KPY பாலாவுக்கு ‘மாமனிதர்’ விருது

image

தாம்பரம் அடுத்த சண்முகம் சாலையில், இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில், காமெடி நடிகர் KPY பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு ‘மாமனிதர்’ விருதினை தொழிலதிபர் ஜெயராமன் ரெட்டியார் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில், இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு நிறுவனர் எம்.கே.எஸ்.சந்திரகுமார், இயக்குனர் தாம்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 14, 2024

ரயில்கள் ரத்து: கூடுதலாக சிறப்பு பேருந்து இயக்க முடிவு

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (செப்.15) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!