Chengalpattu

News January 21, 2026

கதிகலங்கும் வண்டலூர் பூங்கா

image

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 23 வயது வெள்ளைப்புலி ‘அனு’ மற்றும் 22 வயது சிறுத்தை ‘ரமேஷ்’ ஆகியவை வயது மூப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தன. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் 1 பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், ஒரே வாரத்தில் 3விலங்குகள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துப் பராமரித்தது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2026

செங்கை: மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

image

செங்கை மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. (SHARE IT)

News January 21, 2026

செங்கல்பட்டு: நள்ளிரவில் எரிந்த கோரத்தீ

image

கடப்பாக்கம்: பனையூரில் நேற்று (ஐன-20) ஏற்பட்ட மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. வீட்டிலிருந்த மின் ஒயர்களின் ஏற்பட்ட கசிவால் தீ பரவியதை கண்ட குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். மேலும் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 21, 2026

செங்கல்பட்டில் அதிர்ச்சி!

image

செங்கல்பட்டு கே.கே.நகர் பகுதியில் நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா சைன் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணி பகுதியைச் சேர்ந்த விக்ரம் (25) என்பவர் மது போதையில் தனது சொந்த வாகனத்திற்கு தானே தீ வைத்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 21, 2026

செங்கல்பட்டில் 300 பேர் அதிரடி கைது!

image

காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாவட்டத் தலைவர் சசிகலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. திடீரென ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 300 பேரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

News January 21, 2026

தாம்பரம் – கொல்கத்தா வந்தே பாரத் ரயில் இயக்கம்

image

தாம்பரம் – கொல்கத்தா (சாந்திரகாச்சி) இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை ஜனவரி 18 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று காலை இந்த ரயில் தாம்பரம் வந்தடைந்தது. தமிழகத்திற்கான மூன்றாவது அம்ரித் பாரத் சேவையான இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 23 முதல் தாம்பரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஐந்து புதிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News January 21, 2026

தாம்பரம் – கொல்கத்தா வந்தே பாரத் ரயில் இயக்கம்

image

தாம்பரம் – கொல்கத்தா (சாந்திரகாச்சி) இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை ஜனவரி 18 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று காலை இந்த ரயில் தாம்பரம் வந்தடைந்தது. தமிழகத்திற்கான மூன்றாவது அம்ரித் பாரத் சேவையான இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 23 முதல் தாம்பரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஐந்து புதிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News January 21, 2026

தாம்பரம் – கொல்கத்தா வந்தே பாரத் ரயில் இயக்கம்

image

தாம்பரம் – கொல்கத்தா (சாந்திரகாச்சி) இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை ஜனவரி 18 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று காலை இந்த ரயில் தாம்பரம் வந்தடைந்தது. தமிழகத்திற்கான மூன்றாவது அம்ரித் பாரத் சேவையான இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 23 முதல் தாம்பரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஐந்து புதிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News January 21, 2026

தாம்பரம் – கொல்கத்தா வந்தே பாரத் ரயில் இயக்கம்

image

தாம்பரம் – கொல்கத்தா (சாந்திரகாச்சி) இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை ஜனவரி 18 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று காலை இந்த ரயில் தாம்பரம் வந்தடைந்தது. தமிழகத்திற்கான மூன்றாவது அம்ரித் பாரத் சேவையான இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 23 முதல் தாம்பரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஐந்து புதிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News January 21, 2026

தாம்பரம் – கொல்கத்தா வந்தே பாரத் ரயில் இயக்கம்

image

தாம்பரம் – கொல்கத்தா (சாந்திரகாச்சி) இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை ஜனவரி 18 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று காலை இந்த ரயில் தாம்பரம் வந்தடைந்தது. தமிழகத்திற்கான மூன்றாவது அம்ரித் பாரத் சேவையான இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 23 முதல் தாம்பரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஐந்து புதிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

error: Content is protected !!