India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மறைமலைநகர் 13ஆவது வார்டு பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையை மூட வலியுறுத்தி விசிகவை சேர்ந்த 100க்கு மேற்பட்டோர் நேற்று பாவேந்தர் சாலை வழியாக பேரணியாக சென்றனர். இதையடுத்து, போலீசார் தடுப்புகள் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த ‘எமெரிட்ஸ் ஏர்லைன்ஸ்’ பயணிகள் விமானத்தில் அளவுக்கு அதிகமாக எரிபொருள் நிரப்பிவிட்டதால் விமானத்தின் எஞ்சினில் இருந்து புகை வெளியேறியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தின் பாதுகாப்பு தன்மை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பிரச்னை சரி செய்யப்பட்டு பின்னர் தகவல் தெரிவிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கு சானிட்டோரியத்தில் டி.பி.மருத்துவமனை வளாகத்தில் 4.69 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தினை மாநகராட்சி பெயருக்கு உரிமை மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணிக்காக ரூ.43.40 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூரைச் சேர்ந்த செந்தில்குமார் (50), பூந்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர் ரவி (48) உடன் பைக்கில் நேற்று சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பல்லாவரம் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், செந்தில்குமார் சம்பவ இடத்திலும், ரவி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (55), கபாலி (65). இருவரும் கூலி வேலை செய்கின்றனர். நேற்று சக்திவேல், கபாலியை வேலைக்கு அழைத்து சென்றார். பணி முடித்து இருவரும் மது அருந்தி வீட்டுக்கு சென்றனர். கபாலி சம்பளம் கேட்டதற்கு மது சாப்பாட்டுக்கு சரியாகி விட்டது என சக்திவேல் கூற ஆத்திரடைந்த கபாலி கத்தியால் சக்திவேல் கழுத்தில் குத்தினார். பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
தாம்பரம் மாநகராட்சியில் தெருநாய்களின் தொல்லைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து வந்த புகார்கள் அடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களைப் பிடித்து இனக்கட்டுப்பாடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 23.8.2024 முதல் 23.9.2024 வரை, 256 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, 253 நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
செங்கல்பட்டு, வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், சார் ஆட்சியர் திரு.வெ.நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரமேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருநிறைச்செல்வன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளிக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம், ரூ.25 ஆயிரம் திருமண நிதி உதவித் தொகையினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியா் தலைவர் ச.அருண்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிதி நிறுவனம் பெயரில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்குமார்(42) என்பவரிடம், பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரூ.32.50 லட்சம் பண மோசடி செய்துள்ளனர். இதையடுத்து, அருண்குமார் அளித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீஸார், மோசடியில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்தனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட சிலரை தேடி வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. இதில், ஒரு சில மண்டலங்களில் இன்னும் ஆணையர்கள் நியமிக்கப்படவில்லை. இருக்கும் ஆணையர்களே கூடுதல் பொறுப்பாக பணிகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த பி. சொர்ணலதா தாம்பரம் மாநகராட்சியின் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.