India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

செங்கை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB <

மாமல்லபுரம் அருகே த.வெ.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் நட்சத்திர விடுதி முன்பாகக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜய் வருகை மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், (த.வெ.க) செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க அவர் சற்றுமுன் அரங்கம் வந்தடைந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான செயல் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் திரண்டுள்ளனர்.

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பால்பாண்டி, நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமண விழாவிற்குச் சென்றார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

செங்குன்றம் மெக்கானிக் கடையில் 60 ஆயிரம் ரூபாய் திருடிவிட்டு தலைமறைவான சரவணனை, உரிமையாளர் அஸ்லாம் இன்ஸ்டாகிராமில் பெண் குரலில் பேசி வரவழைத்துள்ளார். ஆசையில் வந்த சரவணனை கார் கும்பல் கடத்தியபோது, போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட அஸ்லாம் உட்பட 7 பேரை ஒட்டேரி போலீசார் கைது செய்து காரைப் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜமீன் பல்லாவரத்தைச் தஷீத் (7), தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தான். கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட சிறுவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மயங்கி விழுந்தான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டம், தற்போது நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் சேவை அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் இவ்வழி தடத்தில் ரயில் சேவை தாமதமானது.

பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டம், தற்போது நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் சேவை அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் இவ்வழி தடத்தில் ரயில் சேவை தாமதமானது.
Sorry, no posts matched your criteria.