Chengalpattu

News October 1, 2024

திருக்குறள் முற்றேந்தல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு திருக்குறள் முற்றேந்தல் போட்டி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள், tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் அக்.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27233969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

அக்.2ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது. FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 ஆகிய கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய தினத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தாலோ! அல்லது சட்ட விரோத வழிகளில் மது விற்பனை செய்தாலோ! கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 1, 2024

மேலமையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமையூர் ஊராட்சி மன்ற அலுவலத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உடனிருந்தனர்.

News October 1, 2024

ஆட்சியர் தலைமையில் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி மதிப்பாய்வு வழிகாட்டுதல் கூட்டம் ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் கல்வி அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆட்சியர், கல்வி முன்னேற்றம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

News September 30, 2024

32 பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கிய ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலமாக திருக்கழுக்குன்றம் வட்டத்தை சார்ந்த 32 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை, ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணா சர்மா மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

News September 30, 2024

சிறைக்காவலர்களை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு

image

சென்னையைச் சேர்ந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் (41) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில், அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். செப்.24ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த இவரை செங்கல்பட்டு சிறையில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் கோவைக்கு அனுப்பும் போது பணியில் இருந்த போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News September 30, 2024

செங்கல்பட்டு நகராட்சியுடன் இணையும் 15 ஊராட்சிகள்

image

செங்கல்பட்டு நகராட்சியில் அருகில் உள்ள 15 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: அஞ்சூர், குண்ணவாக்கம், வீராபுரம், தென்மேல்பாக்கம், புலிப்பாக்கம், திம்மாவரம், பழவேலி, ஆலப்பாக்கம், மேலமையூர், வல்லம், திருமணி, ஒழலூர், சிங்கப்பெருமாள் கோயில், செட்டிபுண்ணியம், பட்ரவாக்கம். இந்த ஊராட்சிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க

News September 30, 2024

துணை முதல்வரான உதயநிதி: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

image

தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின், இன்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை முன்னிட்டு, திருப்போரூர் பேரூர் திமுக சார்பில் இன்று பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. திருப்போரூர் பேருந்து நிலையம் மற்றும் பஜார் வீதிகளில் பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு திமுகவினர் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

News September 29, 2024

அரசு பள்ளியில் தீ விபத்து: புத்தகங்கள் எரிந்தன

image

சிங்கபெருமாள் கோயிலில் உள்ள அரசு பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் குடோன் உள்ளது. இதில், சுமார் 10 டன் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இன்று காலை, புத்தகங்கள் இருந்த அறையில் இருந்து திடீரென தீப்பிடித்து கரும் புகை வெளியேறியது. தகவல் அறிந்து வந்த தீயனைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் எரிந்தன.

News September 29, 2024

கலெக்டர் அலுவலகத்தில் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலக பகுதியில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

error: Content is protected !!