Chengalpattu

News January 31, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஜன.30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

செங்கல்பட்டு: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

செங்கல்பட்டு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

செங்கை: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

செங்கை: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

செங்கல்பட்டு மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhind<>ec25<<>>/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 30, 2026

செங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

செங்கை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay<<>>.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

செங்கை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 30, 2026

செங்கை: உங்கள் What’s app பாதுகாப்பா இருக்கா? Click Now!

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

News January 30, 2026

செங்கல்பட்டு மாணவர்கள் சாதனை

image

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய ஏர்கன் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று சாதனை படைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஏர்கன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் பி.கிருஷ்ணகுமார் தலைமையில் கலந்து கொண்ட வீரர்களில் 12 பேர் தங்கமும், 4 பேர் வெள்ளியும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

News January 30, 2026

செங்கை: காதல் வலையில் வீழ்த்திச் சீரழிப்பு

image

திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் (20), கேரள மாநில மாணவியைக் காதலித்து நன்மங்கலத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆகாஷ் தன்னைத் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் மாணவி புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த ஆகாஷைக் கன்னியாகுமரியில் வைத்துப் பிடித்த தாம்பரம் மகளிர் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

News January 30, 2026

குரோம்பேட்டையில் கொடூரத்தின் உச்சம்!

image

அரக்கோணத்தைச் சேர்ந்த ஆண்டனி குரோம்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அந்த சிறுமியிடம் பேசி சந்திக்கும் போதெல்லாம் சிறுமியை வற்புறுத்தி திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த வழக்கில் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் சிறை ரூ.1,000 அபராதம் விதித்தது.

error: Content is protected !!