Chengalpattu

News November 1, 2024

கோவா, புனே, ஜெய்ப்பூர் தினசரி விமான சேவை தொடக்கம்

image

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னை – கோவா – சென்னை இடையே, இன்று முதல் புதிதாக தினசரி விமானத்தை இயக்கத்தையும், அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னை – ஜெய்ப்பூர் – சென்னை இடையே, புதிதாக தினசரி விமானத்தையும், சென்னை – புனே – சென்னை இடையே இன்று முதல் புதிதாக மற்றொரு தினசரி விமானத்தையும் இயக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்த கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News November 1, 2024

ஆப்பிரிக்காவிற்கு விமான சேவை

image

ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ் அபாபாவிற்கு, சென்னையில் இருந்து இதுவரை வாரத்தில் 3 நாட்கள் ‘எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்’ விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்திற்கு, பயணிகள் இடையே நல்ல வரவேற்பும், அதோடு பயணிகள் கூட்டமும் அதிகமாக இருப்பதால், இப்போது இந்த விமானம் தற்போது வாரத்தில் 4 நாட்கள் சென்னையில் இருந்து அடிஸ் அபாபாவிற்கு இயக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News November 1, 2024

சென்னை திரும்பும் பயணிகளுக்கு மின்சார ரயில் வசதி

image

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக, காட்டாங்கொளத்தூர் முதல் தாம்பரம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில் உள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் ரயில்கள் கூடுதல் நேரம் நின்று செல்லும். 4ஆம் தேதி காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையத்தில் அதிகாலை 4 மணிக்கு முதல் ரயில் புறப்படும். தொடர்ந்து, 4.30, 5.45, 6.20 மணிக்கு அடுத்தடுத்த ரயில்கள் இயக்கப்படும்.

News November 1, 2024

தாய்லாந்துக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

image

தாய்லாந்து நாட்டின் கடற்கரை எழில் அழகு கொஞ்சும் சுற்றுலா தளமான ஃபுகட் நகருக்கு, சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமானத்தை ‘தாய் ஏர் ஏசியா’ விமானம் நிறுவனம் புதிதாக நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள், இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News November 1, 2024

இந்த தீபாவளிக்கு உங்களை மகிழ்வித்தது எது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புதுப் படங்கள் வெளியானதால், திரைப்படங்களை கண்டு ரசித்து உற்சாகமான தீபவாளியாக இம்முறை அமைந்தது. இதில், உங்களை மகிழ்வித்தது எது?

News November 1, 2024

பெண்கள் காப்பகங்களுக்கு கட்டாய பதிவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும், பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள், இல்லங்கள் மற்றும் மகளிர் விடுதிகள் போன்றவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அனைத்து விடுதி நிர்வாகிகளும் இணையதள வழியில், தாங்கள் நடத்தி வரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை வரும் 30ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் ச.அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News November 1, 2024

மத்திய உளவு பிரிவு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

image

சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய உளவு பிரிவு உதவி (IB) ஆய்வாளர் முருகேசன் (55), நேற்று திடீரென விமான நிலைய உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். திடீரென அவருக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டதால்,கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 1, 2024

செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாக, இன்று (நவ.1) செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 1, 2024

தீபவாளி கொண்டாட்டம் கோலாகலம்

image

செங்கல்பட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து பாரம்பரிய முறையில் கொண்டாடினர். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பலகாரங்கள் செய்து, அறுசுவை உணவு சமைத்து, வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன் கொண்டாடினர். இதனால், இரவில் சென்னை ஜொலித்தபடி காணப்பட்டது. நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாடினீர்கள்?

News November 1, 2024

போலீசாரை தாக்கிய இருவர் கைது: ஒருவருக்கு வலை வீச்சு

image

குரோம்பேட்டை நேரு நகரில், வடமாநிலத்தவர் சிலர் கட்டுமான பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த சபரி (32), அஜய் (21), சஞ்சய் (23) ஆகியோர் அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். ரோந்து போலீசார் தமிழன்பன், சுந்தர்ராஜ் ஆகியோர் இருதரப்பையும் தடுத்துள்ளனர். போலீஸ் என்றும் பாராமல் மூவரும் சேர்ந்து போலீசை தாக்கினர். இதில் சபரி, அஜய் இருவரும் கைது செய்யப்பட்டனர். சஞ்சய் தலைமறைவாக உள்ளார்.

error: Content is protected !!